உண்மையானது வதந்தி.. 'வாடிவாசல்' படத்தில் சூர்யாவுக்கு பதில் இவரா?

  • IndiaGlitz, [Friday,March 01 2024]

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் தற்போது அவர் அந்த படத்தில் விலகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டால் சூர்யாவுக்கு பதில் சூரி நடிப்பார் என்று வதந்தி கிளம்பிய நிலையில் தற்போது அந்த வதந்தி கிட்டத்தட்ட உண்மையாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து ஒரு சில காரணங்களால் சூர்யா விலகி விட்டதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் தனுஷ் தான் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தனுஷ் ஏற்கனவே அதிக படங்கள் கையில் வைத்திருப்பதால் இந்த படம் இன்னும் தாமதம் ஆகலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ’விடுதலை’ படத்தின் படப்பிடிப்பின்போது சூரியின் நடிப்பில் முழுமையான திருப்தி அடைந்த வெற்றிமாறன், ‘வாடிவாசல்’ படத்தில் சூரியையே நடிக்க வைத்து விடலாம் என்று முடிவு செய்ததாகவும், ஒரு சில காட்சிகளை நடிக்க வைத்து பார்த்தபோது அவர் திருப்தி அடைந்ததால் சூரியை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை அவர் இயக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

ரீரிலீசுக்கு கிடைத்த வரவேற்பு.. தியேட்டரில் கண்கலங்கிய தனுஷ் பட இயக்குனர்..!

கடந்த சில வாரங்களாகவே ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் சென்னை கமலா திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது என்பதும் புதிய திரைப்படத்திற்கு வரும் கூட்டத்திற்கு இணையாக

'அனிமல்' இரண்டாம் பாகத்தில் விஜய், விக்ரம் பட நாயகி.. அப்ப ராஷ்மிகா கிடையாதா?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான 'அனிமல்' திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றாலும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும், ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நபரான நடிகை நளினி, சமீபத்தில் ஒரு இதயப்பூர்வமான நேர்காணலை வழங்கினார்.

என்னோட 21வயசுக்குள்ளயே நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை நடித்து முடித்தேன்.முக்கிய கதாபாத்திரம் மட்டுமில்லாமல் நகைச்சுவை கதாபாத்திரமும் ஏற்று நடித்தேன்........

போதைப்பொருள் விவகாரம்: சிம்பு பட இயக்குனர் தலைமறைவா?

தமிழகத்தில் போதை பொருள் விவகாரத்தில் ஒரு சில திரை உலக பிரபலங்கள் சிக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் சிம்பு படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர்

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்.. செல்பி எடுக்க குவிந்த இளம்பெண்கள்..!

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த நிலையில் இளம்பெண்கள் அவருடன் செல்பி எடுக்க குவிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.