டெல்டா விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும்: பிரபல இயக்குனர் கோரிக்கை

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

சமீபத்தில் கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு சென்ற நிலையில் நிவாரண பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் இன்னும் ஒருசில உள்புற கிராம பகுதிகளுக்கு போதுமான நிவாரணம் சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது.

டெல்டா பகுதி மக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்து தவித்து வரும் நிலையில் அவ்ர்கள் பெற்ற வங்கி கடனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பிரபல இயக்குனர் வெற்றிமாறன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைக்கு வழியில்லாமல் இருக்கும் டெல்டா விவசாயிகள், வங்கிக்கடனை திரும்ப கட்டுவது என்பது சாத்தியமற்றது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்தால் டெல்டா விவசாயிகள் ஓரளவு நிம்மதி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடி வீரன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா கடந்த சில மாதங்களாக 'தேவராட்டம்' என்ற படத்தை இயக்கி வந்தார்.

'மாரி 2'வை அடுத்து ரிலீசுக்கு தயாரான தனுஷ் படம்

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் புரமோஷனும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

'பேட்ட' இசை வெளீயீடு: முக்கியமானதை மறந்த கார்த்திக் சுப்புராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' வரும் 29ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் ஒன்றரை மாத இடைவெளியில் அவர் நடித்துள்ள இன்னொரு படமான 'பேட்ட' வரும் பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படமான 'கனா' திரைப்படம் பெண்கள் கிரிக்கெட் குறித்த கதையம்சத்தில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும்

குரலே இல்லாதவங்க கேள்வி கேட்கணும்ன்னா...'வெல்வெட் நகரம்' டிரைலர் விமர்சனம்

நடிகை வரலட்சுமி நடித்த 'வெல்வெட் நகரம்' படத்தின் டிரைலரை சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.