விஜய்யை சந்தித்து ஒரு மணி நேரம் பேசிய வெற்றிமாறன்.. 'தளபதி 69' கன்பர்ம்?

  • IndiaGlitz, [Sunday,February 18 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69 வது திரைப்படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லி, ஹெச் வினோத் உள்ளிட்டோர்களில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த பட்டியலில் வெற்றிமாறன் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே விஜய்யை சந்தித்து ஒன்லைன் கதையை கூறிய இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விஜய்யை ஒரு மணி நேரம் சந்தித்து முழு கதையையும் கூறியுள்ளாராம். வெற்றிமாறன் கதை சொன்ன விதம் விஜய்க்கு ரொம்பவே பிடித்து விட்டதை அடுத்து கண்டிப்பாக இந்த படத்தை பண்ணலாம் என்று விஜய் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அதற்கு முன் அவர் கார்த்திக் சுப்புராஜ், வினோத் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் விஜய் அரசியலில் முழு முயற்சியில் இறங்கி இருப்பதால் தனது கடைசி படம் அரசியல் சம்பந்தமான படமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதாகவும் எனவே வெற்றிமாறன் படத்தை அவர் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டதாகவும் புறப்படுகிறது

எனவே ’தளபதி 69’ படத்தை இயக்குவது வெற்றிமாறன் தான் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விஜய் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்தால் மட்டுமே இந்த படம் உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் ’தளபதி 69’ படத்தின் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

More News

'அமரன்' படம் குறித்து மேஜர் முகுந்த் மனைவியின் எமோஷனல் பதிவு.. ராஜ்குமார் பெரியசாமியின் ரியாக்சன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'அமரன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில்

வருங்காலத்தில் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும்: பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ்..!

தனது தந்தையை எஸ்பி பாலசுப்பிரமணியன் குரலை தனது அனுமதி இன்றி பயன்படுத்திய பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

'கேப்டன்' மறைந்த சோகம்.. மனதை தேற்றி கொண்டு மீண்டும் களத்தில் இறங்கிய  சண்முக பாண்டியன்..!

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது மகன் சண்முக பாண்டியன் தந்தை மறைவை அடுத்து மனதை தேற்றிக்கொண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல

சென்னை கல்லூரியில் திடீர் விசிட் அடித்த சமந்தா.. மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு..!

நடிகை சமந்தா சென்னையில் உள்ள கல்லூரிக்கு திடீர் விசிட் அடித்த நிலையில் மாணவ மாணவிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

'தலைவர் 171' படப்பிடிப்பு எப்போது? 'லியோ 2' உருவாகுமா? லோகேஷ் கொடுத்த அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'தலைவர் 171' படத்தின் படப்பிடிப்பு எப்போது மற்றும் விஜய்யின் 'லியோ 2' உருவாகுமா? ஆகிய கேள்விகளுக்கு இன்று நடந்த நிகழ்ச்சியின் போது லோகேஷ் கனகராஜ் அப்டேட்