வெற்றிமாறனின் 'விடுதலை 2' ரிலீஸ் தேதி இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,August 28 2024]

வெற்றிமாறன் நடிப்பில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ’விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

முதல் பாகத்தில் வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்த நிலையில் அவருடைய இளமைக்கால காட்சிகள் தான் இரண்டாம் பாகத்தில் உள்ளது என்றும் அவரது மனைவியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிட்டது. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி காரணமாக இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்தில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, அனுராக் காஷ்யப், கிஷோர், ராஜீவ் மேனன், கவுதம் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

 

More News

விஜய்யின் தவெக முதல் மாநாடு தேதி, இடம் இதுதான்.. முக்கிய தகவல்..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது கட்சியின் கொடி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

'சூர்யா 44' படத்தில் இணைந்த ரஜினி, விஜய், தனுஷ் பட நடிகை.. ஒரே ஒரு பாடலுக்கு நடனமா?

சூர்யா நடித்து வரும் 44 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன்

நடிகை ரேகா நாயர் கார் மோதி ஒருவர் பலி.. கைதாக வாய்ப்பா? 

நடிகை ரேகா நாயர் கார் மோதியதால் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் அவர் கைதாக வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் இணையும் மகன் யாத்ரா.. என்ன செய்ய போகிறார்?

தனுஷ் இயக்கத்தில் உருவான ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ப்ரியா அட்லி ஆரம்பிக்க போவது இதுதான்.. ஆகஸ்ட் 30 முதல் நெட்டிசன்களுக்கு விருந்து?

பிரபல இயக்குனர் அட்லி மனைவி ப்ரியா அட்லி விரைவில் ஒரு புதிய அம்சத்தை ஆரம்பிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் அது என்னவாக இருக்கும்? புதிய தொழில்