எங்கிருந்தாலும் வாழ்க: 60களில் கொடிகட்ட பறந்த பழம்பெரும் பாடகர் மறைவு

  • IndiaGlitz, [Friday,June 19 2020]

தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரும், கடந்த 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவருமான ஏ.எல்.ராகவன் இன்று காலமானார்.

நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்திற்காக இவர் பாடிய ’எங்கிருந்தாலும் வாழ்க’ என்ற பாடல் உள்பட 100க்கான பாடல்கள் இன்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒலித்து கொண்டே இருக்கும். மேலும் சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை எம்.என்.ராஜம் அவர்களின் கணவரான இவருக்கு இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சையின் பலனின்றி அவர் காலமாகிவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாடகர் ஏ.எல்.ராகவன் அவர்களின் மறைவுக்கு நடிகர் சங்கம் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

திரும்பவுமா??? பெய்ஜிங்கில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!!! விமான நிலையம், பள்ளிகள் மூடல்!!!

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து சீனா மீண்டு வந்துவிட்டது. உலகின் மற்ற நாடுகள் எல்லாம் மரணப்பயத்தில் இருக்கும் போது பரவலுக்கு காரணமான சீனா மட்டும் நிம்மதியாக இருக்கிறது,

எரியுற தீயில எண்ணெய் ஊற்றும் நேபாளம்: இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம்!!!

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லைப்  பகுதியில் பிரச்சனை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே நேபாளம் எல்லை வரையறைக் குறித்து இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கூறிவந்தது.

கொரோனா நேரத்தில் மனித இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த விரும்பும் அரபு நாடு!!! என்னவா இருக்கும்???

ஈரான் நாட்டில் தற்போது அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கொரேனா சிகிச்சைக்கு புது டெக்னிக்: எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை!!!

கொரோனாவிற்குத் தடுப்பு மருந்து மட்டுமல்ல சிகிச்சையும் சிக்கல் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.

விஜய்சேதுபதி பட நாயகிக்கு திருமணம்: ஐடி ஊழியரை மணக்கிறார்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி உள்பட பலர் நடித்த திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பார்த்து கதை சொல்றேன்