பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Wednesday,September 08 2021]

மக்கள் திலகம் எம்ஜிஆரின் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் புலமைபித்தன் காலமானார்.

பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியரும், முன்னாள் அதிமுக அவைத் தலைவரும், அரசவை கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86

எம்ஜிஆரின் தீவிர தொண்டராக இருந்தவர் புலவர் புலமைப்பித்தன் என்பதும் எம்ஜிஆரின் அன்புக்கு பாத்திரமாக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9.33 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில், அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்லநேரம், நினைத்ததை முடிப்பவன், பல்லாண்டு வாழ்க, நேற்று இன்று நாளை, நீதிக்கு தலைவணங்கு, மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் ,உலகம் சுற்றும் வாலிபன் உள்பட பல திரைப்படங்களில் அவர் பாடல் எழுதியுள்ளார்

அதேபோல் சிவாஜி கணேசன் நடித்த ‘சிவகாமியின் செல்வன், ரஜினிகாந்த் நடித்த தங்கமகன், பணக்காரன், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, நாயகன், பாக்யராஜ் நடித்த கன்னிப்பருவத்திலே, டார்லிங் டார்லிங் டார்லிங், இது நம்ம ஆளு, முந்தானை முடிச்சு உள்பட நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,.

More News

ஷங்கர்- ராம்சரண் தேஜா படத்தின் டைட்டில் மற்றும் முழுவிபரங்கள்!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு

கார்த்தி-அதிதி ஷங்கரின் 'விருமன்': இரண்டு நிமிட வீடியோ வைரல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதிஷங்கர், கார்த்தி நடிக்கும் 'விருமன்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்.

அட்லி-ஷாருக்கான் படத்தில் தளபதி விஜய்யா? ஆச்சரிய தகவல்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'ஜவான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் நாயகிகளாக நயன்தாரா

கொரோனா பரப்பியதாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை?

உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஓயாத நிலையில் சில நாடுகள் இன்னும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

காதலியின் காதில் செக்ஸ் வைத்துக்கொண்ட காதலன்… வந்த விளைவு?

ஆபாசப்படம் பார்க்கும் பழக்கம் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் இளைஞர்கள் பலர், வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு விபரீதத்தில்