பழம்பெரும் இசையமைப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Wednesday,February 16 2022]

இந்திய திரை உலகின் பழம்பெரும் இசையமைப்பாளர் காலமானதை அடுத்து அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பிலஹரி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பப்பிலஹரி சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து பாலிவுட் திரையுலகினர், ரசிகர்கள் அவரது மறைவிற்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1973 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான பப்பிலஹரி அதன் பின்னர் ஏராளமான இந்தி படங்களுக்கு இசையமைத்தார். அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளியான ‘பாஹி 3’ என்ற பாலிவுட் படத்தில் இசை அமைத்தார்.

தமிழில் வெளியான அபூர்வ சகோதரிகள், பாடும் வானம்பாடி, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதும் அது மட்டுமின்றி தெலுங்கு கன்னடா குஜராத்தி மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஹீரோயின் அவதாரத்திற்கு ரெடியான நடிகர் ஷாருக்கின் மகள் சுஹானா… வைரல் பிக்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானின் மூத்த மகளான சுஹானா கான் ஏற்கனவே

தடுப்பூசி போட அடம்பிடிக்கும் நோவக்… பகீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

செர்பிய நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்

சாகசமான காதல் பயணம்… நடிகை ஸ்ரேயா வெளியிட்ட அட்டகாசமான பதிவு!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும்

60 வயது கூலித் தொழிலாளி திடீரென்று மாடலான அதிசயம்!

கேரள மாநிலத்தில் கூலித்தொழில் செய்துவரும் 60 வயது முதியவர்

இசைஞானி இசையில் உருவாகும் ஆங்கிலம், பான் இந்தியா திரைப்படம் குறித்த அப்டேட்!

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1,422 ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியது. காதலர் தினத்தையொட்டி