தன்னைத்தானே திடீரென சுட்டுக்கொண்ட பிரபல நடிகர்.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Tuesday,October 01 2024]

பழம்பெரும் நடிகர் திடீரென துப்பாக்கியால் தானே சுட்டுக் கொண்ட சம்பவம், அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரை உலகின் பழம்பெரும் நடிகர் கோவிந்தா இன்று காலை, தனது வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, தவறுதலாக சுட்டுக்கொண்டதாகவும், இதனையடுத்து அவரது காலில் குண்டு பாய்ந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

பாலிவுட் திரை உலகின் பிரபல நடிகர் கோவிந்தா 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும், நடனம், காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் இவர் சிறப்பாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆறு மணிக்கு விமானத்தில் செல்ல இருந்த நிலையில், கோவிந்தா வீட்டிலிருந்து புறப்படும் போது தனது துப்பாக்கியை சுத்தம் செய்ததாகவும், அப்போது திடீரென அந்த துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறி, அவரது காலில் பட்டதாகவும், இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், இந்த விபத்து குறித்து கோவிந்தாவின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது, அவர் சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பி, முழு ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகரான கோவிந்தா, அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதும், கடந்த 2004 ஆம் ஆண்டு வடக்கு மும்பை தொகுதியில் காங்கிஅஸ் கட்சியின் சார்பாக வெற்றி பெற்று எம்பியான நிலையில் தற்போது அவர் சிவசேனா கட்சியில் உள்ளார்.

More News

தளபதி விஜய்யின் 'கோட்' ஓடிடி ரிலீஸ் எப்போது? நெட்பிளிக்ஸ் அதிரடி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில், இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து அறிவிப்பை நெட்பிளிக்ஸ்

ஐசியூவில் ரஜினிகாந்த்: என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்? பரபரப்பு தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இது ஒரு சாதாரண பரிசோதனை

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி: 16 போட்டியாளர்கள் இவர்களா? புதிய லிஸ்ட்..!

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 6ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான தகவல்கள்

'மெய்யழகன்' ட்ரிம் செய்யப்பட்டது ஏன்? இயக்குனர் பிரேம்குமார் விளக்கம்..!

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான 'மெய்யழகன்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை

ட்ரிம் செய்யப்பட்ட கார்த்தியின் 'மெய்யழகன்'.. நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன?

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவான 'மெய்யழகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக இருப்பதால்,