நடிகை ஸ்ரீதேவி காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

நடிகை ஸ்ரீதேவி துபாயில் குடும்ப நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு கலந்து கொள்ள சென்றிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 54

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. பாலிவுட்டில் சுமார் பத்து ஆண்டுகாலம் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஒரே தமிழ் நடிகை ஸ்ரீதேவிதான்

இந்த நிலையில் கணவர் மற்றும் மகளுடன் குடும்ப நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்ரீதேவி துபாய் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்றிரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்தபோது அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி கபூர் ஆகியோர் உடனிருந்தனர்.

ரஜினி, கமல், அமிதாப் உள்பட இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் பலருடன் நடித்த ஸ்ரீதேவி கடைசியாக 'மாம்' என்ற படத்தில் தோன்றினார். பத்மஸ்ரீ, பிலிம்பேர் விருதுகளை பெற்ற ஸ்ரீதேவியின் மறைவு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

இறந்தது போல் நடித்து உயிர் பிழைத்தேன்: கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய மென்பொறியாளர் லாவண்யா

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மென்பொறியாளர் லாவண்யா, பணியை முடித்துவிட்டு இரவில் சென்னை பெரும்பாக்கத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்தபோது மூன்று கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார்.

நான் மீண்டும் திருமணம் செய்துகொள்கிறேன்: சன்னிலியோன் அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் பாலிவுட் திரைப்படங்களிலும் தமிழில் 'வீரமாதேவி' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

அருவி படத்தின் பட்ஜெட்டே ரூ.2 கோடிதான், ஆனால் விபிஎஃப்-க்கு? எஸ்.ஆர்.பிரபு வேதனை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் எதனால்?

பிரதமர் வருகையை புறக்கணிப்பதாக நடிகர்-எம்.எல்.ஏ அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று தமிழகம் வருகை தருகிறார் என்பதும், இன்று நடைபெறும் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார் என்பதும் தெரிந்ததே.

திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன் கமல் கையிலெடுக்கும் முக்கிய பிரச்சனை

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' 'என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.