அருண்விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் தந்தை விஜயகுமார்

  • IndiaGlitz, [Wednesday,August 07 2019]

பொதுவாக திரையுலகில் உள்ள அப்பாக்கள் தங்கள் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய சொந்தப் படம் தயாரிப்பது வழக்கம். ஆனால் நடிகர் அருண் விஜய் கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு தானாகவே தன்னம்பிக்கையுடன் முன்னேறி, தற்போது கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நிலையில் அவரது தந்தையும் பழம்பெரும் நடிகருமான விஜயகுமார், அருண்விஜய் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார்.

'மூவிஸ் ஸ்லைட்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளார் இந்த படத்தை விஜய் குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஏற்கனவே அவருடன் 'தடம்' படத்தில் இணைந்து நடித்த தன்யா ஹோப் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

அருண் விஜய் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாபியா' என்ற படத்திலும் அதனை அடுத்து 'பாக்சர்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்து வரும் 'அக்னிசிறகுகள்' படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபாஸுடன் அருண் விஜய் நடித்த 'சாஹோ' திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

பிகில்' படத்தின் அடுத்தகட்ட பணியை தொடங்கிய விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'நேர் கொண்ட பார்வை'யும், 'நேரு கொண்ட பார்வை'யும்: பார்த்திபன்

ஒரு பக்கம் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்னொரு பக்கம் காஷ்மீர் மாநிலத்திற்கு முன்னாள் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியை

'ஐ லவ் யூ' சொன்ன அபிராமி: முகினுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்

பிக்பாஸ் வீடு என்பது ரியாலிட்டி ஷோ நடைபெறும் வீடா? அல்லது காதலர்கள் குடியிருக்கும் வசந்த மாளிகையா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு இந்த சீசன் ஆரம்பமானதில் இருந்து

தமன்னாவிற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் செய்யும் உதவி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடிப்பில் இந்த ஆண்டில் ஏற்கனவே 'கண்ணே கலைமானே' மற்றும் 'தேவி 2' ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தடுக்கி விழுந்த கவின், மயங்கி விழுந்த சேரன்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் ஐந்து குழுக்களாக பிரிந்து ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் மதுமிதா-அபிராமி, சாக்சி-லாஸ்லியா, கவின் - சேரன், சாண்டி-தர்ஷன், முகின் - ஷெரின் என ஐந்து ஜோடிகள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படுகிறது