close
Choose your channels

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மருத்துவமனையில் அனுமதி:

Thursday, April 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் நேற்று மரணம் அடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பாலிவுட் திரை உலகினர் மீளமுடியாத நிலையில் தற்போது பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு வரை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் அதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் சுமார் ஒரு வருட காலம் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை அவரது சகோதரர் ரந்திர் கபூர் அவர்கள் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது ரிஷிகபூர் மும்பை தனியார் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரிஷிகபூர் நலமுடன் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகர் நடிகைகள் தங்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment