சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன வெங்கட் பிரபு.. இதுதான் காரணம்..!

  • IndiaGlitz, [Friday,August 09 2024]

இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவான ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை நேற்று சிவகார்த்திகேயன் பார்த்தார்.

படம் பார்த்தவுடன் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’ரெமோ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த ஆனந்த்ராம், ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தின் கதை எழுதி இயக்கி நடித்துள்ளார் என்றால் அவருடைய வளர்ச்சியை பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

நல்ல நண்பர்கள் இருந்தால் நம்முடைய வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும் என்பதை நான் அனுபவத்தில் வைத்துள்ளேன். அந்த வகையில் இந்த படத்தை பார்க்கும்போது என்னுடைய நட்பு வட்டாரத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் ஞாபகம் வருகிறது. நீங்களும் இந்த படத்தை திரையரங்குகளில் பாருங்கள், கண்டிப்பாக இந்த படம் உங்கள் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளுடன் கனெக்ட் ஆகும்’ என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த வெங்கட் பிரபு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் திரையரங்குகளில் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தை பாருங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

More News

சூரியிடம் கதை சொன்ன ஜேசன் சஞ்சய்.. கதை கேட்டவுடன் சூரி பதில் என்ன தெரியுமா?

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தின் கதையை சூரியிடம் சொன்னதாகவும் அந்த கதையை கேட்டு சூரி சொன்ன பதில் அனைவருக்கும் ஆச்சரியத்தை

விஜய்சேதுபதியை உதைத்தால் பரிசு.. அறிவித்த அரசியல்வாதிக்கு நீதிமன்றம் தண்டனை..!

விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு தருவேன் என அரசியல்வாதி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இது குறித்த வழக்கில் நீதிமன்றம்

தினமும் 21 மணி நேரம் நடிக்கிறார்.. 20 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் இது நடக்குது: அஜித் மேனேஜர்..!

நடிகர் அஜித் கடந்த பல ஆண்டுகளாக ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த திரைப்படத்தில் கமிட் ஆவார் என்றும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தால் குழப்பம் ஆகிவிடும்

தளபதி விஜய்யின் 'கோட்' .. வட இந்திய ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஒரு பக்கம்

கனா காணும் காலங்கள்' சீரிஸின், அடுத்த சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் பிரபலமான வெப் சீரிஸான ​​'கனா காணும் காலங்கள்' சீரிஸின், அடுத்த  சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.