3 மணி நேரம் ரன்னிங் டைம் என்பது பயமாகத்தான் இருந்தது: வெங்கட் பிரபு..!

  • IndiaGlitz, [Friday,August 30 2024]

பொதுவாக ஒரு திரைப்படம் அதிகபட்சமாக 2:30 மணி இருந்தால் மட்டுமே வெற்றியடையும் என்று கூறப்பட்டு வருகிறது என்றும் மூன்று மணி நேரம் படம் என்பது ரசிகர்களை சலிப்படைய செய்யும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ’இந்தியன் 2’ படம் இருந்தது என்பதும் ’இந்தியன் 2’ வெளியான முதல் நாளே நெகட்டிவ் ரிசல்ட் ஏற்பட்டதை அடுத்து அந்த படத்தின் ரன்னிங் டைம் குறைக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’கோட்’ திரைப்படம் மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக ரன்னிங் டைம் இருப்பதை அடுத்து சில ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வரும் நிலையில் அதற்கு வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

முதலில் மூன்று மணி நேரம் படம் என்றவுடன் எங்களுக்கு சிறிது பயம் ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் முழுமையாக கதையை சொல்வதற்கு அவ்வளவு நேரம் எங்களுக்கு தேவைப்பட்டது. சுவராசியமான காட்சிகளை கட் செய்து விட்டு படத்தை வெளியிட முடியாது.

மூன்று மணி நேரமாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த படத்தில் உள்ள அனைத்து காட்சிகளும் சுவராசியமான இருக்கும் என்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக இருக்கும் என்று நினைத்து தான் மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் உள்ள படமாக வைத்துள்ளோம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

 

More News

நாளை அஜித், விஜய், யுவன் நாள்.. வைரலாகும் வெங்கட்பிரபுவின் பதிவு..!

நாளை அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி அஜித், விஜய் மற்றும் யுவன் ஆகிய மூவருக்கும் மிகச்சிறந்த நாள் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

வாழ்க்கையை மாற்றும் முருகன் மந்திரம்! - ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் !

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் விஜய் குமார் அவர்கள், முருகன் திருப்புகழின் அற்புத சக்தி பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

'கோட்' படத்தில் இத்தனை வாரிசுகளா? கிண்டல் செய்த நெட்டிசனுக்கு வெங்கட் பிரபு பதில்..!

'கோட்' திரைப்படத்தில் இத்தனை வாரிசுகளா என கிண்டல் செய்த நெட்டிசனுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'தங்கலான்' படத்தின் இரண்டு வார வசூல்.. தயாரிப்பு நிறுவனம் அளித்த ஆச்சரிய தகவல்..!

விக்ரம் நடித்த'தங்கலான்' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டு வார வசூல் குறித்த தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நரிகளின் கதை.. ஸ்ரீரெட்டியின் அடுத்த பதிவு..!

நடிகை ஸ்ரீ ரெட்டி நேற்று விஷால் குறித்து மறைமுகமாக ஒரு பதிவு செய்த நிலையில் தற்போது நரிகளின் கதை என்ற ஒரு பதிவை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.