கெட்ட வார்த்தையால் திட்டிய விஜய் ரசிகர்.. வெங்கட்பிரபுவின் பதிலடி என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,March 02 2024]

விஜய் ரசிகர் ஒருவர் ‘கோட்’ படத்தின் அப்டேட் கேட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவை கெட்ட வார்த்தையால் திட்டிய நிலையில் அவருக்கு வெங்கட் பிரபு பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மாஸ்கோவில் நடைபெற உள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களில் படக்குழுவினர் மாஸ்கோ செல்ல இருக்கும் நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் ‘கோட்’ படத்தின் சிங்கிள் எப்போது வரும் என கடந்த சில நாட்களுக்கு முன் கேட்டார். அதற்கு பதில் கூறிய வெங்கட் பிரபு விரைவில் வரும் என்று கூறினார்.

இதனை அடுத்து அந்த ரசிகர் மீண்டும் ’சீக்கிரம் வரும் என்று சொன்னீர்கள், ஆனால் ஒரு வாரம் ஆகியும் இன்னும் சிங்கிள் அப்டேட் வரவில்லையே’ என்று கூறியதோடு ஒரு கெட்ட வார்த்தை கூறி வெங்கட் பிரபுவை திட்டி உள்ளார். இதற்கு வெங்கட் பிரபு ’சொல்லலாம் என்றுதான் நினைச்சேன், இப்போ இதுக்கு மேல எப்படி என்று நீங்களே சொல்லுங்க, என்று கூறியதோடு விஜய் #VijaynaBloods என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் மன்னிப்பு கேட்டதோடு ’இது மாதிரி தரங்கெட்ட நபர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி உங்கள் தரத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் விஜய் ரசிகர்களுக்கு உங்கள் படம் தான் பதிலாக இருக்க வேண்டும்’ என்றும் கூறி வருகின்றனர்

More News

செல்வம் பெற பரிகாரங்கள்: பாலாறு சுவாமிகள் அவர்களின் ஆலோசனைகள்

செல்வம், வெற்றி, மகிழ்ச்சி பெற பரிகாரங்கள் எப்படி செய்வது? அதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?

உண்மையானது வதந்தி.. 'வாடிவாசல்' படத்தில் சூர்யாவுக்கு பதில் இவரா?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் தற்போது அவர் அந்த படத்தில் விலகி விட்டதாக கூறப்படுகிறது.

ரீரிலீசுக்கு கிடைத்த வரவேற்பு.. தியேட்டரில் கண்கலங்கிய தனுஷ் பட இயக்குனர்..!

கடந்த சில வாரங்களாகவே ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் சென்னை கமலா திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது என்பதும் புதிய திரைப்படத்திற்கு வரும் கூட்டத்திற்கு இணையாக

'அனிமல்' இரண்டாம் பாகத்தில் விஜய், விக்ரம் பட நாயகி.. அப்ப ராஷ்மிகா கிடையாதா?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான 'அனிமல்' திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றாலும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும், ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நபரான நடிகை நளினி, சமீபத்தில் ஒரு இதயப்பூர்வமான நேர்காணலை வழங்கினார்.

என்னோட 21வயசுக்குள்ளயே நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை நடித்து முடித்தேன்.முக்கிய கதாபாத்திரம் மட்டுமில்லாமல் நகைச்சுவை கதாபாத்திரமும் ஏற்று நடித்தேன்........