'லூப் தொடர்கிறது': வெங்கட்பிரபுவின் பதிவுக்கு என்ன அர்த்தம்..!

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் ’லூப் தொடர்கிறது’ என பதிவு செய்துள்ளதை அடுத்து விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் இரண்டு வருடங்கள் ஆனதை அடுத்து அந்த படத்தின் குழுவினர்கள் தங்களது சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ’மாநாடு’ படம் குறித்த சிம்புவின் பதிவிற்கு பதிலளித்த வெங்கட் பிரபு ’லூப் தொடர்கிறது’ என்று பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து சமூக வலைதளங்களில் ’மாநாடு’ படத்தில் லூப் கதை, ’தளபதி 68’ படத்தில் தொடர வாய்ப்பு இருப்பதாக விஜய் ரசிகர்களும், ’மாநாடு’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று சிம்பு ரசிகர்களும் அடுத்தடுத்து பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் லூப் கதையை முதன்முதலாக வித்தியாசமாக திரையில் காட்டிய வெங்கட் பிரபு அதனை ’தளபதி 68’ படத்திலும் வைப்பாரா? அல்லது ’தளபதி 68’ படத்தை முடித்தவுடன் ’மாநாடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.