வெங்கட்பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெங்கட்பிரபு இயக்கிய ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் இயக்கத்தில் உருவான அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் குமார் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’மன்மதலீலை’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி ’மன்மதலீலை’ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தமிழழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. அசோக்குமார், சம்யுக்தா மேனன், ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
 

More News

டால்பினுடன் குடும்பத்தோடு கொஞ்சி விளையாடும் ரம்பா: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகில் கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் டால்பினுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 3வது வழக்கு: மீண்டும் கைது!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் 2 வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இன்று முடிவு தெரிந்துவிடும்… பீதியில் உக்ரைன் அதிபர் வெளியிட்ட வீடியோ!

உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்தக் கூடும் என்று உக்ரைன் அதிபர்

கோலி இல்லாத நேரத்தில் ஹிட்மேன் ரோஹித்தின் சாதனை… உற்சாகத்தில் கொண்டாடும் ரசிகர்கள்!

முன்னாள் கேப்டன் விராட் கோலி இலங்கைக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் ஹிட் மேன் ரோஹித் சர்மா

இது எனது ஆசிர்வதிக்கப்பட்ட பயணம்: சமந்தாவின் நெகிழ்ச்சியான பயணம்!

நடிகை சமந்தா தனது 12 ஆஆண்ஊ திரையுலக பயணம் குறித்த நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.