குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளாராக வெங்கையா நாயுடு அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

இந்திய குடியரசு தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. பதிவான வாக்குகள் வரும் 20ஆம் தேதி டெல்லியில் எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான பரபரப்பு அரசியல் கட்சிகள் இடையே தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் பாஜக வேட்பாளராக நேற்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள வெங்கையா நாயுடு இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கையா நாயுடு துணை குடியரசு தலைவராக அறிவிக்கப்பட்டவுடன், தமிழக முதல்வர் ஈபிஎஸ், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் குடும்பத்தின் புதிய தலைவருக்கான வித்தியாசமான போட்டி

பிக்பாஸ் குடும்பத்தில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களில் ஒருவரை வாரம் ஒருமுறை தலைவராக்கும் விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சினேகன், காயத்ரி, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் இதுவரை தலைவராக பணிபுரிந்திருக்கும் நிலையில் நேற்று புதிய தலைவர் தேர்வு நடைபெற்றது....

'விக்ரம் வேதா' ரன்னிங் டைம்

கணவன் - மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் இயக்கத்தில் முதன்முதலாக விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது...

பேக் பண்ணிய நமீதா! அடுத்து வெளியேற போவது யார்?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, கலகலப்பு மற்றும் கொஞ்சம் சீரியஸ் கலந்து சென்று கொண்டிருந்தாலும் இன்றைய தமிழக மக்களின் ஹாட் டாக் இந்த நிகழ்ச்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை...

கமல்ஹாசனுடன் டெல்லி முதல்வரின் பிரதிநிதி திடீர் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சொற்பொர் நடந்து வருகிறது. தமிழக அரசின் நிர்வாகத்தில் உள்ள குறைகளை கமல் சுட்டிக்காட்டியதற்கு அமைச்சர்கள் அவரை மிரட்டி வருகின்றனர்...

லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் நடத்திய 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியில் அதிகமான தமிழ்ப்பாடல்கள் பாடியதால் இந்தி பேசும் வட இந்தியர்கள் கோபத்தில் வெளியேறியதாக கூறப்படுகிறது...