சிவகார்த்திகேயன் - கெளதம் மேனன் படத்தை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் ஏற்கனவே அவர் விக்ரம் நடித்துவரும் ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் கவுதம் மேனன் இணையும் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அந்ந்நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் அவர்களின் மகள் ப்ரீத்தா கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் கவுதம் மேனன் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே ’டாக்டர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் அவர் தற்போது ’டான்’ மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அரண்மனைக்குள்ள யாருடா? 'அரண்மனை 3' வீடியோ பாடல்

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது.

ராகவன் விவகாரம்...பாஜகவின் பி டீம் என்பதை சீமான் நிரூபித்துவிட்டார்..! எம்.பி ஜோதிமணி அறிக்கை..!

"சீமான் மீது உள்ள குற்றத்தை மறைக்கவே, அவர் ராகவனுக்கு ஆதரவாக பேசுகிறார்" என்று கரூர் எம்.பி. ஜோதிமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

புதுசா யாரு கதை சொல்றா, பழைய கதையின் உல்டாதான்: 'அனபெல் சேதுபதி' டிரைலர்

விஜய்சேதுபதி, டாப்ஸி நடித்த 'அனபெல் சேதுபதி' என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும்

துப்பாக்கி முனையில் செய்தி வாசிக்கும் அவலம்… இன்னும் என்னென்ன நடக்குமோ?

ஆப்கானிஸ்தான் மக்கள் தாலிபான்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று துப்பாக்கி முனைகளுக்கு நடுவே செய்தியாளர் ஒருவர் செய்தி வாசிக்கிறார்.

இந்திய வீரரின் பதக்கம் திடீர் பறிப்பு: என்ன காரணம்?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத்குமார் வெண்கல பதக்கம் வென்ற நிலையில்