4 நாட்களில் ரூ.40 கோடி: வேலைக்காரனின் அபார வசூல்

  • IndiaGlitz, [Tuesday,December 26 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. 

இந்த நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் இதுவரை இல்லாத அளவில் சிவகார்த்திகேயனின் பெஸ்ட் ஓப்பனிங் என்று கூறும் வகையில் இருந்தது. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த படத்திற்கு எதிர்பார்த்ததைவிட அதிக வசூல் கிடைத்துள்ளதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த படம் கடந்த நான்கு விடுமுறை நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.29 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் ரூ.3.82 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.7.85 கோடியும், கோவையில் ரூ.4.94 கோடியும், திருச்சி-தஞ்சை பகுதியில் ரூ.3.18 கோடியும் வசூல் செய்துள்ளது. 

அதுமட்டுமின்றி இந்த படம் கேரளாவில் ரூ.65 லட்சம் வசூலாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடகாவில் ரூ.1.54 கோடியும், வெளிநாடுகளில் ரூ.7 கோடியும் வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் இந்த படம் உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

முதலமைச்சர் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை விமர்சனம்: அதிமுகவினர் கொந்தளிப்பு

பிரபல எழுத்தாளர், நடிகர், அரசியல் விமர்சகர்  சோ அவர்களின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆடிட்டர் குருமூர்த்தி,

மக்கள் வேணுமா? காசு வேணுமா? அதிமுகவினர்களுக்கு நடிகர் செந்தில் கேள்வி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அணிக்கு பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் என்ன சிறுபிள்ளை விளையாட்டா? ரஜினியெல்லாம் வரமுடியாது: நாஞ்சில் சம்பத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய ரசிகர்களின் சந்திப்பின்போது வரும் 31ஆம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவிருப்பதாக கூறியுள்ளார்.

புத்தாண்டுக்கு முன் 'தளபதி 62' படத்தின் அறிவிப்பு?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 62' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சூர்யாவாக மாறிய அல்லு அர்ஜூன்

சமீபத்தில் நடந்த படவிழா ஒன்றில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது கோபம் அடைந்ததாக பரபரப்பான செய்தி வெளியான நிலையில் மீண்டும் ஒருமுறை அவர் ரசிகர்களிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.