'வேலைக்காரன்' இசை வெளியீடு தேதியை அறிவித்த அனிருத்

  • IndiaGlitz, [Saturday,November 25 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதியை இசையமைப்பாளர் அனிருத் அதிகாரபூர்வமாக வீடியோ செய்தி ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, 'வேலைக்காரன் படத்தின் சிங்கிள் பாடல்களாக வெளிவந்த 'கருத்தவனெல்லாம் கலீஜா மற்றும் 'இறைவா' பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு எனது நன்றிகள். இந்த நிலையில் இந்த படத்தின் முழு ஆல்பம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. சிங்கிள் பாடல்களுக்கு கொடுத்த வரவேற்பை அனைத்து பாடல்களுக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

இசை வெளியீடு நடைபெறும் இடம், நேரம் குறித்த தகவல்கள் மிக விரைவில் தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

More News

அஜித்தின் 'விசுவாசம்' டைட்டிலுக்கு பின்னணி இதுதானா?

அஜித் நடிக்கும் 58வது படத்திற்கு 'விசுவாசம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்தததே. கடந்த சில ஆண்டுகளாக அஜித் நடிக்கும் படத்தின் டைட்டில் படப்பிடிப்பு நடைபெறும்போதுதான் வெளியாகும்.

தினகரன் போட்டி: மீண்டும் ஆர்.கே.நகரில் கொட்டப்போகும் பணமழை

சென்னை ஆர்.கே.நகரின் வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது முதல் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகியுள்ளன.

மணிரத்னம் படத்தின் முக்கிய பணி இன்று முதல் ஆரம்பம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

கமல் மீது வழக்குப்பதிவா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் 'இந்து தீவிரவாதம் இல்லை என இனியும் கூற முடியாது' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

வெற்றி பெறாவிட்டாலும் சொன்ன சொல்லை காப்பாற்றிய சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்டவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றால் அந்த பணத்தின் மூலம் பொதுமக்களுக்கு நூலகம் ஒன்றை கட்டித்தர வேண்டும்