சுசித்ரா கூறிய போதை குற்றச்சாட்டு.. விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜலட்சுமி

  • IndiaGlitz, [Monday,May 20 2024]

கடந்த சில நாட்களுக்கு முன்னால் பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பேட்டி ஒன்றில் கூறிய நிலையில் அவர் கூறிய திரை உலக பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகி சுசித்ரா தனது பேட்டியில் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், விஜய், தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா உள்பட சிலர் பார்ட்டிகளுக்கு கலந்து கொண்டிருந்த போது கொகைன் போன்ற கொடுமையான போதைப் பொருளை பயன்படுத்தி உள்ளனர் என்றும் குற்றம் காட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து கூறிய தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ’கலை துறையில் உள்ளவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவர்கள். ஆனால் இவர்களே போதைப்பொருள் பயன்படுத்தியதாக சுசித்ரா குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இவர்களை பார்த்து தான் மாணவ மாணவர்களும் கெட்டுப் போகிறார்கள். எனவே காவல்துறையினர் சுசித்ராவிடம் விசாரணை செய்து யார் யாருக்கு போதை மருந்து சப்ளை செய்யப்பட்டது? போதை மருந்துகளை பார்ட்டியில் பயன்படுத்தியவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் விஜய், தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா, கார்த்திக் குமார் உள்ளிட்டவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் போதை மருந்து பயன்படுத்தி உள்ளார்களா என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் புகார் மனு அளித்திருப்பதாகவும் தனது புகார் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் வீரலட்சுமி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More News

தாய் தெய்வ வழிபாட்டின் சிறப்புகள்: சிவ சதீஷ்குமார் அவர்களின் பேட்டி

ஆன்மீக பேச்சாளர் சிவ சதீஷ்குமார் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தாய் தெய்வ வழிபாட்டின் சிறப்புகள் பற்றியும், பல்வேறு தாய் தெய்வங்களை வழிபடுவத

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அறுவை சிகிச்சையா? என்ன ஆச்சு?

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்னும் சில நாட்களில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரே படத்தில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார்.. முக்கிய கேரக்டரில் காஜல் அகர்வால்..!

ஒரே திரைப்படத்தில் தென்னிந்திய பிரபலங்களான பிரபாஸ், மோகன்லால் , சரத்குமார், மோகன் பாபு ஆகியோர் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்க

இந்த 3 நடிகர்களுக்கு திருமணம் முடிந்த பிறகுதான் எனக்கு திருமணம்.. விஷால் பேட்டி..!

நடிகர் விஷாலுக்கு தற்போது 46 வயது ஆகும் நிலையில் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் தான் திருமணம்

'குக் வித் கோமாளி' இர்பான் வைத்த பார்ட்டியில் பிக்பாஸ் மாயா.. சட்டவிரோத செயலை செய்தாரா?

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் இர்பான் துபாயில் வைத்த ஒரு பார்ட்டியில் பிக்பாஸ் மாயா கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த  பார்ட்டியில்