சுசித்ரா கூறிய போதை குற்றச்சாட்டு.. விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜலட்சுமி

  • IndiaGlitz, [Monday,May 20 2024]

கடந்த சில நாட்களுக்கு முன்னால் பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பேட்டி ஒன்றில் கூறிய நிலையில் அவர் கூறிய திரை உலக பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகி சுசித்ரா தனது பேட்டியில் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், விஜய், தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா உள்பட சிலர் பார்ட்டிகளுக்கு கலந்து கொண்டிருந்த போது கொகைன் போன்ற கொடுமையான போதைப் பொருளை பயன்படுத்தி உள்ளனர் என்றும் குற்றம் காட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து கூறிய தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ’கலை துறையில் உள்ளவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவர்கள். ஆனால் இவர்களே போதைப்பொருள் பயன்படுத்தியதாக சுசித்ரா குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இவர்களை பார்த்து தான் மாணவ மாணவர்களும் கெட்டுப் போகிறார்கள். எனவே காவல்துறையினர் சுசித்ராவிடம் விசாரணை செய்து யார் யாருக்கு போதை மருந்து சப்ளை செய்யப்பட்டது? போதை மருந்துகளை பார்ட்டியில் பயன்படுத்தியவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் விஜய், தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா, கார்த்திக் குமார் உள்ளிட்டவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் போதை மருந்து பயன்படுத்தி உள்ளார்களா என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் புகார் மனு அளித்திருப்பதாகவும் தனது புகார் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் வீரலட்சுமி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.