இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கு பிரபல நடிகை எச்சரிக்கை..!

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

இதோட நிறுத்திக் கொள்ளுங்கள் என பிரபல நடிகை, ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூனியர் என்டிஆர் நடித்த ’தேவாரா’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்கள் கிடா வெட்டி அதன் ரத்தத்தை போஸ்டர்கள் மற்றும் கட்டவுட் மீது தெளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தமிழ்நாட்டில் கட் அவுட்டை பாலாபிஷேகம் மட்டுமே ரசிகர்கள் செய்து வந்த நிலையில் தெலுங்கு மாநிலங்களில் ரத்தத்தால் அபிஷேகம் செய்தது செய்தது குறித்த வீடியோ இணையத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட நடிகை வேதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் ’இது மிகவும் கொடியது, அந்த பாவப்பட்ட குழந்தைக்காக எனது இதயம் ரத்தத்தை சிந்துகிறது, இது மிகப்பெரிய சித்திரவதை, மிகப்பெரிய கொடுமை, யாருக்கும் இது நடக்கக்கூடாது.

குரலற்ற அப்பாவியான அந்த ஜீவனை எப்படி வதைக்க முடிகிறது என்றே தெரியவில்லை. அந்த அப்பாவிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். கடவுளின் கைகளில் அது தஞ்சம் அடையட்டும். உன்னை காப்பாற்ற முடியாத எங்களை மன்னித்துவிடு. ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஒரு உயிரை இனியும் கொல்ல வேண்டாம். யாரும் இந்த வன்முறையை ஆதரிக்கப் போவதில்லை. அதனால் இதோடு தயவு செய்து நிறுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட் பதிவாகி வருகிறது.

 

More News

இனிமேல் இதுதான் டிரெண்ட்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித்தின் புகைப்படங்கள்..!

இனிமேல் இதுதான் டிரெண்ட் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல்

ரஜினியின் 'வேட்டையன்' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்'  திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும்

நடிகர் விஜய் அடுத்த படம் நடிப்பாரா.? Tarot Reading சொல்வெதென்ன..?

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் பிரபல டாரோ கார்ட் ரீடர் சாரா அவர்கள் அளித்த பேட்டி, டாரோ கார்ட் ஆஸ்ட்ராலஜி உலகிற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது.

ஒரு படத்தில் 5 தயாரிப்பாளர்கள்.. 5 பேருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட்.. ஸ்ருதி ஹரி கூறிய அதிர்ச்சி தகவல்..!

ஒரு தமிழ் திரைப்படத்தை 5 தயாரிப்பாளர்கள் தயாரித்தார்கள் என்றும் அந்த 5 பேருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்கள் என்றும் நடிகை ஸ்ருதி ஹரி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை விட்டு செல்கிறாரா ஜெயம் ரவி? வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி சென்னையை விட்டு செல்வதாகவும் அவர் மும்பையில் செட்டிலாக இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.