எதுக்கு மீன் குழம்பு சட்டியை கழுவனும்? ரஜினிக்கு விசிக எம்பி கேள்வி

  • IndiaGlitz, [Thursday,March 12 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது அரசியல் செயல்பாடு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதில் ஒன்று சிஸ்டத்தை சரி செய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் அதனால் பயனில்லை என்றும், சிஸ்டத்தை சரி செய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் மீன் குழம்பு சட்டியை கழுவாமல் அந்த சட்டியில் சர்க்கரை பொங்கல் வைப்பது போல் ஆகும் என்றும் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த கருத்து குறித்து விசிக எம்பி டாக்டர் ரவிகுமார் கூறுகையில், ‘ஏன் மீன்குழம்பு வைத்த சட்டியைக் கழுவிவிட்டு பொங்கல் வைக்கவேண்டும்? புதிதாக ஒரு பாத்திரத்தில் வைக்கலாமே! இவரது திட்டத்தை சோதித்துப் பார்க்க ஏன் ஒரு நாட்டை இவர் உருவாக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் கட்சித் தலைமைக்கு ஒருவர் ஆட்சித் தலைமைக்கு ஒருவர் என்பது இந்திய அளவில் காலகாலமாய் இருப்பதுதானே? மன்மோகன்சிங் பிரதமர், சோனியா காங்கிரஸ் தலைவர். மோடி பிரதமர், நட்டா பாஜக தலைவர். மாநிலங்களிலும்கூட அப்படி இருக்கிறது என்று ரஜினியின் மற்றொரு கருத்துக்கு அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 

More News

"மக்களே.. வெளிநாட்டு பயணங்களை தவிர்த்துவிட்டு நாட்டிலேயே இருங்கள்"..! பிரதமர் மோடி.

மக்கள் தேவையில்லாமல் அடிக்கடி வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்த்தால் வைரஸ் பரவுவதை தடுக்கலாம்

ஆந்திராவிலும் நுழைந்த கொரோனா: இத்தாலியில் இருந்து திரும்பிய மாணவருக்கு பாசிட்டிவ்

சீனாவில் தொடங்கி உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது

பிகில், மாஸ்டர் திரைபடங்களுக்கு விஜய்யின் சம்பளம் எவ்வளவு? வருமான வரித்துறையினர் தகவல்

தளபதி விஜய் வீட்டில் இன்று மீண்டும் வருமானவரித்துறை ரெய்டு நடந்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வருமான வரித்துறையினர் ரெய்டு முடிவடைந்ததாகவும்

தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை??? இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாநில சுகாதாரத் துறை அமைச்சகமும் கடுமையான

ரஜினியின் முடிவை வரவேற்கிறோம்: சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.