close
Choose your channels

'வருஷமெல்லாம் வசந்தம்' ஹீரோ போலவே  இயக்குனரும் தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம்?

Saturday, July 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்த குணால் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த படத்தின் இயக்குநரும் இன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிராஜாவின் மகன் மனோஜ், குணால், அனிதா, நம்பியார் உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’வருஷமெல்லாம் வசந்தம்’. இந்த படத்தில் சிற்பி இசையமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகர்களில் ஒருவரான குணால் கடந்த 2008 ஆம் ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் ரவிசங்கர் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அவரது கேகே நகர் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக இயக்குனர் ரவிசங்கருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியாக இருந்ததாகவும், அதனால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment