'விஐபி 2' படத்தை பார்த்த டிரைவரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை

  • IndiaGlitz, [Monday,August 21 2017]

தனுஷ், நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்த நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய கேரவன் டிரைவர் 'விஐபி 2' படத்தை ஆன்லைனில் பார்த்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரை 'சினிமா தொழிலில் இருந்து கொண்டே சினிமாவை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாமா? என்று கண்டபடி திட்டியுள்ளார். இந்த தகவலை வரலட்சுமி தன்னுடைய சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்துள்ளார்.
ஆன்லைன் பைரசிக்கு எதிராக திரையுலகினர் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் திரையுலகில் இருப்பவர்களே ஆன்லைனில் திருட்டுத்தனமாக புதிய படங்களை பார்ப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More News

சிறைக்கு வெளியே சசிகலா சென்றதற்கான புதிய வீடியோ ஆதாரம்: பெரும் பரபரப்பு

பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக தண்டனை அனுபவித்து வரும் சசிகலா மற்றும் இளவரசி சிறையில் இருந்து வெளியே சென்று ஷாப்பிங் செய்ததாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் பரவியதோடு, ஒருசில வீடியோக்களும் வெளியாகின.

'விஐபி 2', 'தரமணி' படங்களில் 2வது வார வசூல் நிலவரம்

இந்த வாரம் வியாழன் அன்று அஜித்தின் 'விவேகம்' வெளிவரவுள்ளதை அடுத்து கடந்த வெள்ளியன்று எந்த தமிழ்ப்படமும் வெளியாகவில்லை.

எதிரிகள் இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும். 'மெர்சல்' விழாவில் விஜய்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. முதல்முறையாக தனியார் தொலைக்காட்சி, யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர், போன்றவைகளில் ஒரு திரைப்படத்தின் ஆடியோ விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் கோடிக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

உலகின் மிகச்சிறந்த CM விஜய் என டிரம்ப் டுவீட் செய்வார்: பார்த்திபன்

தளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது வெகுபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல் நபராக நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பேசினார்...

மெர்சல் ஆடியோ விழாவில் மெரினா ஜல்லிக்காட்டின் ஒலி-ஒளி காட்சி

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடந்து வருகிறது...