அடுத்த பிறவியில் ஐபிஎஸ் அதிகாரி: பிரபல நடிகையின் ஆசை

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

அடுத்த பிறவியில் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக மாற ஆசை என பிரபல தமிழ் நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு விஜய் நடித்த 'சர்கார்', விஷால் நடித்த 'சண்டக்கோழி', தனுஷ் நடித்த 'மாரி2' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை வரலட்சுமி. இவர் நடித்த 'நீயா', 'கன்னிராசி, 'வெல்வெட் நகரம்', 'ராஜபார்வை' போன்ற படங்கள் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'ராஜபார்வை' என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வரும் வரலட்சுமி, 'அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதில் ஐபிஎஸ் அதிகாரியாக மாற ஆசைப்படுவதாக கூறியுள்ளார். மேலும் எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் வழங்கி வரும் இயக்குனர்களுக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும் வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு, தான் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த காட்சி ஒன்றின் சிறு வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ளார்.

More News

கடனை வசூலிக்க மனைவியை காதலியாக நடிக்க வைத்தவர் கைது!

கொடுத்த கடனை வசூல் செய்ய மனைவியை கடன் கொடுத்தவருடன் காதலி போல் பழகவிட்டு கடன்காரரை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி என தகவல்

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்கிய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

விஜய்சேதுபதியின் படத்தில் அறிமுகமாகும் இயக்குனரின் மகன்!

விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'மாமனிதன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு வித்தியாசமான விவசாயி வேடம்: விவேக் திட்டம்

காமெடி நடிகரான விவேக் சமீபத்தில் சீரியஸான கேரக்டரில் நடித்த 'வெள்ளைப்பூக்கள்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஒரு படத்தை இயக்கும் திட்டம் ஒன்றை விவேக் வைத்துள்ளார்.

போலீஸ் புகார் வேண்டாம், பொறுமையை கடைபிடியுங்கள்: ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

ராகவா லாரன்ஸ் குறித்து ஒருசிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், அவர்கள் மீது ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் போலீஸ் புகார் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.