அவங்க வேலையே குலைக்கிறதுதான்: வரலட்சுமி ஆவேசம்

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

பிரபல நடிகை வரலட்சுமி அவர்கள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு போல்டாக பதிலளித்தார். அதில் ராதிகா குறித்த ஒரு கேள்விக்கு ’ராதிகாவை ஏன் நான் ஆன்ட்டி என கூப்பிடுகிறேன், அம்மா என்று ஏன் கூப்பிடவில்லை என்றும் டுவிட்டரில் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனெனில் ராதிகா என்னுடைய அம்மா இல்லை, எனக்கு அம்மா என்ற ஒருவர் இருக்கிறார். ஒரு நபருக்கு ஒரு அம்மா தான் இருக்க முடியும். எனவே நான் அவரை மட்டுமே அம்மா என்று கூப்பிட முடியும்.

ராதிகாவை நான் அம்மா என்று கூப்பிடவில்லை என்றாலும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் எனது தந்தையின் இரண்டாவது மனைவி என்ற வகையில் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இருவரும் நல்ல உறவில் தான் தற்போது உள்ளோம். அதேபோல் எனது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் என்னை பொருத்தவரை அவர் ஒரு நல்ல அப்பா. அவரை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது.

மேலும் இது குறித்து கேள்வி எழுப்பவர்கள் குறித்து எனக்கு கவலை இல்லை. அவர்களுடைய வேலையே குலைத்துக் கொண்டே இருப்பதுதான். அவர்களுக்கு வேற வேலை இல்லை என்பதால் அதையே பேசி வருகிறார்கள். அவர்களுக்கு உண்மையில் வேலை இருந்தால் ஏன் இதைப் பற்றி எல்லாம் பேசப்போகிறார்கள்’ என்று வரலட்சுமி ஆவேசமாக கூறினார்.வரலட்சுமி இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை எப்போது??? தொடரும் இழுபறி...

கடந்த 2012 இல் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொல்லப் பட்ட மருத்துவ

டிக்டாக்கில் கலக்கி வரும் உலக சுகாதார அமைப்பு!!!

பொழுது போக்குக்காக தீவிர ரசிகர்களை பெற்றிருக்கும் டிக் டாக்கில் தற்போது உலக சுகாதார அமைப்பும் இணைந்திருக்கிறது.

இந்தியாவிலும் கொரோனா.. உறுதி செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்..!

அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. முதல் முறையாக இந்தியாவிலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க விலிருந்து விலகிய நடிகை..!

டெல்லியில் நடந்த வன்முறைக்கு பாஜக காரணமல்ல. நடிகை சுபத்ரா முகர்ஜி அவரது முடிவினை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம்

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோபப்பட்ட கோலி.. என்ன கேள்வி கேட்கப்பட்டது தெரியுமா..?!

“நீங்கள் என்ன நினைக்கிறீகள்?” என்று நிருபரை கோபமாக கேட்டார் கோலி. நீங்கள் அங்கு என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு, சிறந்த கேள்வியுடன் வாருங்கள்.