வருங்கால கணவர் தோளில் சாய்ந்து பறக்கும் வரலட்சுமி.. திருமணத்திற்கு முன் ஒரு ஜாலி அவுட்டிங்.!

  • IndiaGlitz, [Friday,May 10 2024]

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அவர் ஏற்கனவே தனது வருங்கால கணவருடன் ஜாலி ட்ரிப் செய்த புகைப்படங்களை கடந்த மார்ச் மாதம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகி இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் விமானத்தில் தனது வருங்கால கணவரின் தோளில் சாய்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

நடிகை வரலட்சுமிக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் சரத்குமாரின் குடும்பத்தினர் அனைவரும் இதில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நிக்கோலஸ் - வரலட்சுமி திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த மார்ச் மாதம் இருவரும் தாய்லாந்து சென்றனர் என்பதும் அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருவரும் தங்கி இருந்த புகைப்படங்கள் வைரலானது.

இந்த நிலையில் தற்போது வரலட்சுமி தனது வருங்கால கணவருடன் விமானத்தில் பறக்கும் புகைப்படம், விமானத்திலிருந்து எடுத்த செல்பி புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவருடன் ஜாலியாக சுற்றும் வரலட்சுமிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

விஜயகாந்த் இதைத்தான் சொன்னார்.. வாழ்க்கையின் தத்துவத்தை ஒரே நிமிடத்தில் கூறிய செல்வராகவன்..!

நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கையின் தத்துவத்தை ஒரே ஒரு நிமிட வீடியோவில் கூறியதை அடுத்து அந்த வீடியோ தற்போது

'தக்லைஃப்' படத்தில் சிம்பு நடிக்க கூடாது.. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த பிரபலம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தில் சிம்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு,

'வானத்தை போல' சீரியல் நடிகைக்கு திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பான 'வானத்தைப்போல' என்ற சீரியல் நடிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது திருமணம் நடந்துள்ளது.

என் கையில் தாமரை வைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.. நடிகை நமீதா பேட்டி..!

நடிகை நமீதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் கையில் தாமரை வைத்துக் கொண்டு பேட்டி அளித்த நிலையில் கையில் ஏன் தாமரை பூவை வைத்திருந்தேன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இன்று அட்சய திருதியை.. தங்கம் வாங்க முடியாதவர்கள் எதை வாங்கினால் செல்வம் சேரும் தெரியுமா!

செல்வம் செழிப்போடு வாழ வழிவகுக்கும் அக்ஷய திருதியை இன்று (மே 10, 2024) நாள் கொண்டாடப்படுகிறது. தங்கம் வாங்குவது தான் இந்த நாளின் சிறப்பம் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தாலும்