வெளிநாட்டில் திருமணம்.. சென்னையில் மெஹந்தி.. வரலட்சுமி திருமணத்தின் பிரமாண்ட ஏற்பாடு..!

  • IndiaGlitz, [Monday,May 27 2024]

நடிகை வரலட்சுமி மற்றும் நிக்கோலா சச்தேவ் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் தற்போது திருமண தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த திருமணம் வெளிநாட்டில் நடைபெற இருப்பதாகவும் சென்னையில் மெஹந்தி மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக நிக்கோலா சச்தேவ் என்பவரை வரலட்சுமி காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த திருமணம் நிச்சயதார்த்த விழாவில் சரத்குமாரின் குடும்பம் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

இந்த நிலையில் நிக்கோலா சச்தேவ்-வரலட்சுமி திருமணம் ஜூலை மாதம் 2ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் திருமணம் தாய்லாந்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட் திரை உலகின் நட்சத்திரங்களின் ஸ்டைலில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தாய்லாந்தில் திருமணம் குறித்த ஏற்பாடுகளை நிக்கோலா சச்தேவ் உறவினர்கள் செய்து வருவதாகவும் திருமணத்திற்கு வருபவர்களுக்கு பயண ஏற்பாடுகள் இப்போதே திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் திருமணத்திற்கு முந்தைய நாள் மெஹந்தி நிகழ்ச்சி சென்னை தாஜ் ஹோட்டலில், திருமணத்திற்கு பிந்தைய வரவேற்பு நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் நிக்கோலா சச்தேவ் மற்றும் வரலட்சுமி குடும்பத்தினர் பிரம்மாண்டமான திருமணத்தை நடத்த விறுவிறுப்பாக ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

More News

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய்.. வதந்திகளை அடித்து நொறுக்கிய புகைப்படம்..!

தளபதி விஜய் தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அப்பாவுடன் விஜய் பேச மாட்டார் என்ற வதந்தி அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக

அம்மாவுக்கு பிடித்த இடம்.. சென்னையில் உள்ள கோவிலுக்கு விசிட் அடித்த ஜான்வி கபூர்..!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது அம்மாவுக்கு பிடித்த சென்னையில் உள்ள கோவிலுக்கு முதல் முறையாக வந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை

சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' சீரியலில் திடீரென ஒரு மாற்றம்: 'இவருக்கு பதில் இவர்'

சன் டிவியில் 'சிங்கப்பெண்ணே' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் நடிக்க இருக்கும்

நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. காவ்யா மாறனுக்கு ஆறுதல் கூறிய 'வேட்டையன் 'நடிகர்..!

நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில் ஐதராபாத் அணி எதிர்பாராமல் படுதோல்வி அடைந்தது.

நீ இல்லாமல் ஒரு திருமண நாள்.. மறைந்த கணவர் குறித்து உருக்கமான பதிவு செய்த சீரியல் நடிகை..!

கணவர் மறைந்த பின்னர் இன்று இரண்டாவது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகை 'நீ இல்லாமல் நான் ஒரு திருமண நாளை கொண்டாடி கொண்டிருக்கிறேன்' என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.