புயலுக்கு பின் அமைதி.. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன்.. கணவருடன் வரலட்சுமி புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Saturday,July 06 2024]

நடிகை வரலட்சுமிக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் மற்றும் நடிகை வரலட்சுமி திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணம் நடந்தது என்பதும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள், திருமணம் மற்றும் வரவேற்பு என பிஸியாக இருந்த சச்தேவ் - வரலட்சுமி தம்பதிகள் தற்போது திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று உள்ளனர்.

ஹனிமூன் குறித்த புகைப்படத்தை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ’புயலுக்கு பின் அமைதி’ என்ற கேப்ஷனும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.