ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவில் வழக்கு: காவல்துறை ஆணையரிடம் புகார் மனு

  • IndiaGlitz, [Monday,July 23 2018]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவு மற்றும் பாலியல் புகார் கூறி பணம் பறிக்கும் முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் இந்தியன் மக்கள் மன்றம் என்ற அமைப்பு புகார் அளித்துள்ளது

இந்தியன் மக்கள் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வருபவரும் பத்திரிகையாளருமான வாராகி என்பவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், 'ஸ்ரீரெட்டி இந்திய கலாச்சாரத்திற்கும் பெண்கள் சமுதாயத்திற்கும் இழிவையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இவரேதான் சினிமா துறையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சம்மதித்து சினிமா துறை இயக்குனர்கள், நடிகர்கள் பலரிடமும் பாலியலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே இவர் மீது விபச்சார பிரிவின் கீழும், பலரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்ட பிரிவின் கீழும் பெண்கள் சமுதாயத்திற்கும் களங்கம் ஏற்படுத்துதல், சமுதாய சீர்கேடு போன்ற செயலில் ஈடுபட்டுள்ள பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். இந்த புகார் மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரம்யா வெளியேற்றம்: கோலிவுட் பிரமுகர்கள் அதிருப்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாம் ஏற்கனவே கூறியவாறு ரம்யா நேற்று வெளியேற்றப்பட்டார். முதலில் எவிக்சன் பட்டியலிலேயே இல்லாத ரம்யா, தலைவராக

ஒரே நாளில் வெளியாகும் இரண்டு சமந்தா படங்கள்

ஒரு நடிகையின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவருவது என்பது அபூர்வமாக நடக்கும் நிகழ்வு என்ற நிலையில் நடிகை சமந்தாவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டே வாரத்தில் சுமார் ரூ.4 கோடி வசூலை நெருங்கிய 'தமிழ்ப்படம் 2'

ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து பிரமாண்டமான படங்களை எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் ஒருசில கோடி செலவில் குறைந்த பட்ஜெட்டில் படம் இயக்கி

இரண்டாவது வாரத்திலும் வசூலில் சிங்கமாக இருக்கும் 'கடைக்குட்டி சிங்கம்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்ட்ராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்துள்ளன

'சர்கார்' படத்தின் மெயின் வில்லன் குறித்த தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று முதல் விஜய் தனது டப்பிங் பணியை தொடங்கவுள்ளார்