முட்டாள்கள்: நயன்தாராவின் வாடகைத்தாய் சர்ச்சை குறித்து வனிதா விஜயகுமார்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியிருக்கும் நிலையில் இது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் முட்டாள்கள் சொல்வதைப் பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம் என்றும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த நான்கே மாதத்தில் அவர்கள் இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் விதிகள் கடைபிடிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்களும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகியுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ’ஒரு தம்பதி பெற்றோர் ஆவதைவிட சந்தோஷமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. இரண்டு அழகான குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும் வாடகைத்தாய் குறித்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் கூறியபோது, ’லீகல் தெரியும், மெடிக்கல் தெரியும் என்று சில முட்டாள்கள் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குவார்கள். ஆனால் நீங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

வாடகைத்தாய் குறித்த விதிகளை முழுமையாக அறிந்து கொள்ளாமலா நயன்தாரா- விக்னேஷ் தம்பதிகள் இரட்டை குழந்தைகள் பெற்றிருப்பார்கள் என வனிதா விஜயகுமாரின் பதிவுக்கு நெட்டிசன்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More News

'காதல்ன்னு வந்துட்டா மனசு மட்டுமல்ல, உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும்: ராம்-நிவின் பாலி படத்தின் வீடியோ

'காதல்ன்னு வந்துட்டா மனசு மட்டுமல்ல, உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும் என இயக்குனர் ராம் இயக்கி வரும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் வீடியோவில் கூறப்பட்டுள்ளது. 

ஆஸ்கார் விருதுக்கு செல்லும் இந்திய படத்தின் குழந்தை நட்சத்திரத்திற்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்திற்கு பரிதாப முடிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஸ்ரீராமருக்கு 1000 கோயில்கள் இருக்கலாம், ஆனா சேது ஒண்ணு தான் இருக்குது:  'ராமர் பாலம்' டிரைலர்

 பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்த 'ராம் சேது' என்ற பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது

தமிழகத்தில் கொட்டப்போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த நான்கு நாட்களில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்சிதா .. பிரிந்து போன கணவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா குறித்து அவரை பிரிந்து வாழும் கணவரின் சமூக வலைதள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.