வனிதாவை இருட்டில் தாக்கிய மர்ம மனிதர்கள் யார்? அதிர்ச்சி புகைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

நடிகை வனிதாவை நள்ளிரவில் மர்ம மனிதர்கள் சிலர் தாக்கி உள்ள நிலையில் அவர் காயத்துடன் உள்ள புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக உள்ளார். இந்த நிலையில் தினசரி பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்யும் வனிதா, நேற்று தனது பணிகளை நேற்று முடித்துவிட்டு நள்ளிரவில் தனது காரில் வீடு திரும்பினார்.

அவரது சகோதரி வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டு வனிதா இறங்கியதாகவும், அப்போது திடீரென மர்மநபர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாகவும் இதனால் முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும் வனிதா தெரிவித்துள்ளார். மேலும் ’ரெட் கார்டு கொடுப்பியா? என்று அவர்கள் ஆவேசமாக கேட்டதாகவும் அவர்கள் பிரதீப்பின் ஆதரவாளராக இருக்கலாம் என்றும் வனிதா தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வலியுடன் தனது சகோதரியை கீழே வரும்படி அழைத்ததாகவும் இந்த சம்பவத்தை காவல்துறையில் தெரிவிக்கும்படி தனது சகோதரி என்னை வலியுறுத்தியதாகவும், ஆனால் காவல்துறையின் நடவடிக்கை மேல் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தன்னால் தாக்கியவரை அடையாளம் காண முடியவில்லை என்றாலும் பைத்தியக்காரனைப் போல அந்த நபர் சிரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைக்கு எந்த பேட்டி மற்றும் பிக் பாஸ் விமர்சனம் செய்யப் போவதில்லை என்றும் முழு ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வனிதா தனது காயம் பட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.