close
Choose your channels

நான் அரசியலுக்கு வந்தால் முதலில் இதை இலவசமாக கொடுப்பேன்: வாணி போஜன்..!

Friday, June 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வாணி போஜன் சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய போது’ நான் அரசியலுக்கு வந்தால் முதலில் இதைத்தான் இலவசமாக கொடுப்பேன்’ என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விதார்த் மற்றும் வாணி போஜன் நடித்த ’அஞ்சாமை’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட வாணி போஜன் பேசிய போது ’இந்த படத்தில் நான் இரண்டு பெரிய குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளேன். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்க போகிறார்களா? என்று பலர் கேட்டபோது அம்மாவாக நடிப்பதோ, பாட்டியாக நடிப்பதோ முக்கியமில்லை, நமது கேரக்டருக்கு எந்த அளவுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கிறது என்பது தான் முக்கியம் என்று நான் நம்பிக்கையுடன் இந்த படத்தில் நடித்தேன். மேலும் விதார்த் ஒரு கதையை தேர்வு செய்திருக்கிறார் என்றாலே கண்டிப்பாக அவர் நல்ல கதையை தான் தேர்வு செய்திருப்பார் என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

ஏற்கனவே ’செங்களம்’ வெப் தொடரில் நடித்த போது பலர் என்னிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டார்கள். இப்போதும் சொல்கிறேன் நான் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக கல்வியை இலவசமாக கொடுக்கும் திட்டத்தை கொண்டு வருவேன்’ என்று தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு இயக்குனர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை நேரில் நான் பார்த்து கண் கலங்கினேன், ஒரு படத்தை உருவாக்குவதை விட ரிலீஸ் செய்வது எவ்வளவு கஷ்டம் என்பதை நான் பார்த்தேன். நடிகர், நடிகைகள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போது சம்பளத்தை அதிகமாக்கி கொண்டே போவார்கள், ஆனால் ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஒரு இயக்குனர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது இந்த துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்’ என்று அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.