ஏஆர். முருகதாஸ் அடுத்த படத்தில் 'ஓ மை கடவுளே' நாயகி: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’தரபார்’ படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது

இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் ஒரு வெப்சீரிஸ் தயாரிக்க இருப்பதாகவும் அந்த வெப்சீரிஸ்ஸில் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகையும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் நடித்த நடிகையுமான வாணி போஜன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஏஆர் முருகதாஸின் உதவியாளர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பு கொரோனா பரபரப்பு முடிந்ததும் தொடங்கும் என்றும் இந்த வெப்சீரீஸில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது ஏற்கனவே கோலிவுட்டின் பல பிரபலங்கள் வெப்சீரிஸ் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் ஏ ஆர் முருகதாஸ் அவர்களும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கால்கட்டுடன் டிடியின் புகைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களை மகிழ்வித்த வரும்

சூர்யாவுக்கு விஜய் சேதுபதியிடம் இருந்து கிடைத்த 'சிறப்பான' ஆதரவு

சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேசியதாக வதந்தி பரப்பப்பட்டது.

ஊரடங்கில் இருப்பதால் அதிகமாக சாப்பிடுகிறீர்களா??? அடிப்படைக் காரணம் என்ன??

கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்று 121 கொரோனா பாசிட்டிவ்: சென்னையில் மட்டும் 103

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 121 பேர் புதியதாக கொரோனா

பிரபல நடிகரின் கொரோனா தடுப்பு நிதியுதவி ரூ.30 கோடியாக உயர்வு!

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கினார் என்பது தெரிந்ததே