நீட் தேர்வால் வரும் பிரச்சனைக்கு குரல் கொடுத்த வாணி போஜன்.

  • IndiaGlitz, [Thursday,June 06 2024]

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆகி மேலும் ஜெயா டிவியில் மாயா மற்றும் சன் தொலைக்காட்சியில் தெய்வம்கள் சீரியலில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த நம் சின்னத்திரை நடிகை வாணி போஜன் அவர்கள் சமீபத்தில் அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,

அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார்.இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார்.கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் மூன்று ஆண்டுகள் பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.மாடலிங் மூலம் வாய்ப்பு கிடைத்து சின்னத்திரையில் களம் பதித்த இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார்.

தமிழில் ஒரு இரவு படம்,அதிகாரம் 79 மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.பெண்களை மையமாக கொண்டு பல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகை வாணி போஜன் 2014ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான சன் குடும்ப விருதை பெற்றார்.அதுமட்டுமில்லாமல் 2018ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கலாட்டா நட்சத்திர தொலைக்காட்சி விருதை பெற்றுள்ளார்.

செங்கலம் திரைப்படத்தில் ஒரு அதிகாரம் மற்றும் வீரம் மிக்க அரசியல் பெண்ணாக நடித்து அசத்தினார்.இதற்கு முன்பு பார்த்ததை காட்டிலும் ஒரு புதிதான அரசியல் விவாதம் மற்றும் ஒரு திறம்மிக்க பெண்ணாக நடித்தது உண்மையிலே அனைவரையும் ஈர்த்தது.

சமீபத்தில் இவர் நடித்த அஞ்சாமை படத்தின் ட்ரைலர் இன்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.நீட் தேர்வின் மூலம் இன்று வரை பல உயிர் பலியாகின்றது.

எல்லோராலும் நீட் எழுதவும் முடியாது அதே சமயத்தில் எல்லோராலும் நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆகவும் முடியாது.நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரு திறமை மிக்க மாணவனின் நீட் போராட்டத்தை பற்றி விளக்கும் இந்த படத்தில் வாணி போஜன் தன் நடிப்பை மிகவும் அற்புதமாக நடித்து இருப்பார்.வாணி போஜன் பேசிய அஞ்சாமை படத்தை பற்றிய தகவலை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.

More News

நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர்.. விமான நிலையத்தில் பரபரப்பு..!

நடிகை கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே ஒரு இமெயில்.. 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு எண்ட்கார்டு போட்ட இயக்குனர் திருச்செல்வம்..!

'எதிர்நீச்சல்' சீரியல் இயக்குனர் திருச்செல்வனுக்கு ஒரே ஒரு இமெயில் வந்ததாகவும் அதனை அடுத்து அவர் உடனடியாக அந்த சீரியலை முடிக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்தை சந்தித்த சரத்குமார் குடும்பம்.. வைரலாகும் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவருடைய வீட்டிற்கு சென்று சரத்குமாரின் குடும்பம் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் ஷெரின் வீட்டில் நிகழ்ந்த துக்கம்.. ஒரு வாரம் கழித்து தான் அவருக்கே தெரிந்ததாம்..!

பிக் பாஸ் ஷெரின் வீட்டில் ஒரு பெரிய துக்கம் நிகழ்ந்துள்ள நிலையில் அவருக்கே ஒரு வாரம் கழித்து தான் தெரிந்தது என்று வருத்தத்துடன் பதிவு செய்திருப்பதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து

திமுகவில் சேர போகிறாரா திவ்யா சத்யராஜ்? திடீரென செய்த அரசியல் பதிவு..!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திடீரென அரசியல் பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் திமுகவில் சேர போகிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.