'சுந்தரி 2' தொடரில் இணைந்த 'வானத்தை போல' பிரபலங்கள்.. என்ன கேரக்டர்கள் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,August 27 2024]

சன் டிவியில் ஒளிபரப்பான ’வானத்தைப்போல’ சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த இரண்டு முக்கிய கேரக்டர்கள் தற்போது ’சுந்தரி 2’ சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சன் டிவியில் ’சுந்தரி’ சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வானத்தைப்போல’ தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தொடரில் நடித்த திலக் மற்றும் தக்ஷனா ஆகிய இருவரும் தற்போது ’சுந்தரி 2’ தொடரில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவருடைய கேரக்டர்கள் புதிதாக ’சுந்தரி 2’ தொடரில் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் இருவரும் அண்ணன் தங்கை கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

’சுந்தரி 2’ சீரியலில் திலக் மற்றும் தக்ஷனா ஆகிய இருவரும் இணைந்த பின்னர் இந்த தொடருக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நடிகை எமி ஜாக்சன் திருமணம்.. இத்தாலிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த தமிழ் இயக்குனர்.!

நடிகை எமி ஜாக்சன் இரண்டாவது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு இத்தாலிக்கே நேரில் சென்று தமிழ் இயக்குனர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தவரும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவருமான பிஜிலி ரமேஷ் சற்றுமுன் காலமானதாக வெளியாகியிருக்கும்

வாயே திறக்காத எம்.எஸ்.வி., வார்த்தைகளை விடும் ராஜா, ஆம் ராஜாவின் இசையில்தான் உயிர் வாழ்கிறோம், கங்கை அமரனின் கல கல... பேட்டி

இந்திய இசை உலகின் அரசனாக கொண்டாடப்படும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். கங்கை அமரன் தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும்,

பைஜாமாவில் இரத்தம், சிதறிய விரல்களை நெஞ்சில் வைத்து கண்ணீர் விட்ட MGR

விஸ்வநாதன் , ராமமூர்த்தி என்ற இரட்டை ஜாம்பவான்களுக்கு அடுத்து தமிழ் திரைத்துறையில் முத்திரை பதித்தவர்கள் சங்கர் கணேஷ் ஆவர். அவர்களின் ஆளுமை நிறைந்த இசைத்துறையில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு சம்பவம் இருக்கு: ப்ரியா அட்லியின் பதிவால் பரபரப்பு..!

ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிடப் போவதாக ப்ரியா அட்லி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.