'வலிமை' படம் குறித்த முக்கிய அறிவிப்பு: அஜித் ரசிகர்கள் அப்செட்

  • IndiaGlitz, [Thursday,April 30 2020]

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கால் அடுத்தகட்ட படப்ப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை முழுவதும் முடிந்தபின்னரே ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாளை மே 1ம் தேதி தல அஜித் பிறந்தநாளையொட்டி ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் உள்ளிட்ட அப்டேட் வரும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் கொரோனா காரணமாக எந்த அறிவிப்பும் வராது என்று தயாரிப்பு தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவிட்‌ 19 என்னும்‌ கொரோனா என்கிற கொடிய நோயின்‌ தாக்கத்தில்‌, அகில உலகமே போராடிக்‌ கொண்டு இருக்கும்‌ இந்த தருணத்தில்‌ எங்கள்‌ நிறுவனம்‌ தயாரிக்கும்‌ எந்த படத்துக்கும்‌ எந்த விதமான விளம்பரமும்‌ செய்ய வேண்டாம்‌ என்று எங்கள்‌ நிறுவனத்தில்‌ பணியாற்றும்‌ நடிகர்‌, நடிகையர்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப கலைஞர்கள்‌ ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக்‌ கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம்‌ என்பதை தெரிவித்து கொள்கிறோம்‌. அதுவரை தனித்து இருப்போம்‌, நம்‌ நலம்‌ காப்போம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் நாளை ‘வலிமை’ குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளிவராது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

More News

பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மறைவு: ரஜினி, கமல் இரங்கல்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்

கொரோனா சிகிச்சையில் Remdesivir மருந்தின் வெற்றியால் அமெரிக்க, ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம்!!! நடப்பது என்ன???

Remdesivir மருந்தின் சோதனை முடிவுகளால் தற்போது வெள்ளை மாளிகை அதிகாரிகள் நம்பிக்கை பெற்று உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் எவை எவை? மண்டலவாரி பட்டியல்

தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது

கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாகப் பணியாற்றும் உலக நாடுகளின் பெண் தலைவர்கள்!!!

உலக நாடுகளில் பெண் தலைவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகத் தற்போது செய்திகள் வலம் வருகின்றன.

கொரோனா வார்டில் 20 நாட்கள் தொடர்பணி: வீடு திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே அச்சத்தை கொடுத்து வரும் நிலையில் தற்போது மருத்துவர்களும் நர்சுகளும் மருத்துவ ஊழியர்களும்