'வலிமை', 'இந்தியன் 2' குழந்தை நட்சத்திரத்தின் தாயார் கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை ராயபுரத்தை சேர்ந்த முபாரக் என்பவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் நிலையில் இவரது மனைவி 34 வயதான யாஸ்மின் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். முபாரக்-யாஸ்மின் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும், அதில் ஆலம் என்ற 10 வயது சிறுவன் குழந்தை நட்சத்திரம் என்பதும், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்துள்ளார் என்பதும், நடிகர் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஆலமின் தந்தை முபாரக் கடந்தாண்டு விபத்தில் சிக்கி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி போனார். அதுமட்டுமின்றி அவரது குடும்பம் கொரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்டு மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு மீண்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் ஆலம் உள்பட குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. நிறைமாத கர்ப்பிணித்தாய் யாஸ்மினுக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என்பதால் அவர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் ஒருகட்டத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்து நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ஆலம் குடும்பத்தார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான பல லட்சங்கள் செலவு செய்ய முடியவில்லை. இந்த நிலையில் சிறுவன் ஆலம் உடன் நடித்த பெங்களூருவை சேர்ந்த கபீர் என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் ஆலம் குடும்பத்தின் நிலைமையைப் பகிர்ந்து நிதி உதவி கோரியுள்ளார். இதனால் சுமார் 9 லட்சம் ரூபாய் வரை யாஸ்மின் சிகிச்சைக்கு பணம் கிடைத்தது. ஆனால் அதற்குள் யாஸ்மினுக்கு நுரையீரலில் தொற்று 80 சதவீதத்தை அதிகரித்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. என்றாலும் சிசேரியன் செய்து குழந்தையை உயிருடன் மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். குழந்தை பிறந்த பிறகு ஜாஸ்மின் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் தாய் இறந்தது கூட தெரியாமல் ஆலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். முபாரக் தனது மனைவியின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூட பணம் இல்லாமல் தவித்துள்ள நிலையில் நண்பர்கள் சிலர் உதவியுடன் உடலை அடக்கம் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆலம் நடித்த ‘இந்தியன் 2’ மற்றும் ‘வலிமை’ படக்குழுவினர் சம்பள பாக்கி மூன்றரை லட்சத்தை கொடுத்து அவரது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர்களது குடும்ப நண்பர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
 

More News

கொரோனா பாதிப்புக்கு பலியான மற்றொரு திரையுலக பிரமுகர்!

தமிழகத்தை கடந்த சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அப்பாவி பொது மக்களை மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் பாதித்து வருகிறது என்பதும்

உங்களை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்: பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

தமிழ் திரை உலகின் வில்லன் மற்றும் குணசித்திர நடிகரான பொன்னம்பலம் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

4- வது காதலனை ரூம்பில் பூட்டி சித்ரவதை செய்த  ஏட்டு சந்தியா....! கண்ணீருடன் காவலில் புகாரளித்த கணவன்...!

ஏட்டு சந்தியா ராணி தன்னுடைய 4-வது கணவரை அறையில் பூட்டி வைத்து, டார்ச்சர் செய்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

பாடலாசிரியர், நடிகர் மற்றும் அரசியல்வாதி சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுக்கு கொஞ்சி விளையாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்: யாருடன் தெரியுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.