நான் தயங்கினேன்.. ஆனால் விஜய் கணக்கு தப்பவில்லை.. ஹிட்டான குத்துப்பாட்டு குறித்து வைரமுத்து..!

  • IndiaGlitz, [Monday,October 07 2024]

விஜய் படத்திற்காக ஒரு குத்து பாட்டு எழுத வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது நான் தயங்கினேன் என்றும் ஆனால் விஜய் கேட்டுக் கொண்டதாக கூறியதால் அந்த பாடலை எழுதிக் கொடுத்தேன், அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்று கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

விஜய் நடித்த
ஷாஜகான் படத்துக்கு
எல்லாப் பாடல்களையும்
எழுதி முடித்தேன்

'மெல்லினமே'
'மின்னலைப் பிடித்து'
'அச்சச்சோ புன்னகை'
ஆகிய பாடல்கள்
இசை இலக்கியமாய்
அமைந்தது கண்டு
ஆனந்த ஊஞ்சலில் ஆடினேன்

ஓர் அதிகாலையில்
ஒருகால் காருக்குள்ளும்
மறுகால் தரையிலும்
இருந்த பரபரப்பில்
அந்தப் படத்தின் இயக்குனர்
ரவி ஓடிவந்தார்

'படத்துக்கு இன்னொரு
பாட்டு வேண்டும்' என்றார்

'எல்லாப் பாட்டும்
முடிந்து விட்டதே;
இனி என்ன பாட்டு' என்றேன்

'எல்லாப் பாட்டும்
நல்ல பாட்டாகவே
இருக்கு கவிஞரே;
ஒரே ஒரு குத்துப்பாட்டு
வேண்டும்' என்றார்

(கூத்துப் பாட்டு என்பதுதான்
மொழிச் சோம்பேறிகளால்
குத்துப் பாட்டு என்றாகிவிட்டது)

தயங்கினேன்

'விஜய் சொல்லி
அனுப்பினார்' என்றார்

கதாநாயகன் சொன்னபிறகு
மறுக்க முடியவில்லை;
எழுதிக் கொடுத்தேன்

அரங்கம் சென்று பார்த்தால்
இலக்கியப் பாடல்களுக்கு
மெளனமாய் இருந்த கொட்டகை
கூத்துப் பாடலுக்குக் குலுங்கியது

விஜய் கணக்கு
தப்பவில்லை

இசைஇலக்கியம்
இன்புறுவதற்கு;
கூத்துப் பாட்டு
கொண்டாடுவதற்கு

அந்தப் பாட்டு
எந்தப் பாட்டு தெரியுமா?

'சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கறுத்த கோழி மிளகுபோட்டு
வறுத்து வச்சிருக்கேன்'

More News

24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. கண்ணீருடன் விடை பெற்றார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த போட்டியாளர் கண்ணீருடன்

2வது திருமணம் செய்த சீரியல் நடிகை கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில்

மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட பலி.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று நிகழ்ந்த நிலையில் அதில் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'மகாராஜா' வெற்றிக்காக இயக்குனர் நிதிலனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.. வைரல் புகைப்படம்..!

விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு தற்போது மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது

'மெய்யழகன்' இயக்குனர் பிரேம்குமாரின் அடுத்த படம்.. ஆச்சரியம் அடைந்த கார்த்தி..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96', கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த 'மெய்யழகன்' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ள நிலையில், இரண்டு படங்களுமே