இது தீப்பிடித்த காடு, பறவைகளே! பத்திரம்: ஊரடங்கு தளர்வு குறித்து வைரமுத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. பேருந்து, மெட்ரோ ரயில் ஓடும், மால்கள் திறக்கப்படும், கோயில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இபாஸ் ரத்து என்பது அனைவருக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக மக்கள் கவனக்குறைவுடன் இருக்க கூடாது என்றும், தங்களுக்குள் கட்டுப்பாட்டை கடைபிடித்து கொள்ள வேண்டும் என்றும், அரசும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து கவியரசர் வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:

ஊருக்கு வழங்கப்பட்ட
ஊரடங்கின் தளர்வில்
உயிர்க் கொல்லி
நுழைந்துவிடக் கூடாது.

மீண்டும் இயங்கப்போகும்
வாழ்வியல் வெளியில்
கடும் கட்டுப்பாட்டைப்
பெரிதும் கைக்கொள்வீர்
பெருமக்களே!

இது தீப்பிடித்த காடு
பறவைகளே! பத்திரம்.

More News

உயிரோட இருக்கணும் குமாரு.. அது மட்டும்தான் மேட்டரு: செல்வராகவனின் 'கொரோனா' பதிவு

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரனோ வைரஸ் பாதிப்பில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்

கனவுகளுடன் வந்தார், கனவு முடிந்ததும் கிளம்பிவிட்டார்: விஜய்வசந்த் உருக்கமான பதிவு

தனது தந்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு பல கனவுகளுடன் வந்தார் என்றும் அவர் தன்னுடைய கனவு அனைத்தையும் நனவானவுடன் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிட்டார்

தனி விமானம் மூலம் காதலருடன் கொச்சி சென்ற நயன்தாரா: என்ன காரணம்?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானம் மூலம் திடீரென கொச்சி சென்று உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

முதலில் அம்மா, அப்புறம் அப்பா: கொரோனா மரணம் குறித்து தமிழ் நடிகையின் அதிர்ச்சி தகவல்

தனது நெருங்கிய தோழி ஒருவரின் அம்மா முதலில் கொரோனாவுக்கு பலியானதாகவும் அதனை அடுத்து நேற்று அவருடைய தந்தையும் கொரோனாவுக்கு பலியானதாகவும் தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் 

கனமழையில் இடிந்து விழுந்த சுவர்- 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!!!

தென்மேற்கு பருவமழையால் கடந்த சில வாரங்களாக வட இந்திய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.