மலேசிய அமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

மலேசியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் அரசு பதவிகள் உள்பட முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழர்கள் மலேசியாவில் பல உயர்பதவிகளில் உள்ளனர். அந்த வகையில் மலேசியாவின் டத்தோ ஸ்ரீ சரவணன் என்ற தமிழரின் பெயர் சற்றுமுன் வெளியான புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் தற்போது டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களின் நெருங்கிய நண்பரும் கவிஞருமான வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மலேசியத் திருநாட்டின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகிறார் டத்தோஸ்ரீ சரவணன். திருக்குறள் அதிகாரம் போல் அவர் ஆட்சி அதிகாரம் சிறக்க வாழ்த்துகிறேன்.

முன்னதாக மலேசியாவின் எட்டாவது பிரதமராக சென்ற வாரம் பதவியேற்ற முகைதீன் யாசின் புதிய அமைச்சரவைப் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டார். இந்த அமைச்சர்கள் பட்டியலில் டத்தோஸ்ரீ சரவணன் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலேசியாவில் துணைப் பிரதமர் என்ற பதவி இனி இல்லை என்றும், அதற்குப் பதிலாக நான்கு மூத்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் முகைதீன் அறிவித்தார்.

More News

மங்களூரில், மருத்துவமனையிலிருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்..!

அவருக்கு காயச்சல், இருமல் இருந்தது தெரியவர அதிகாரிகள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினர்.       

சூர்யாவின் அடுத்த படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'அருவா' படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அஜித்தை அடுத்து ரிஸ்க் எடுக்கும் சீயான் விக்ரம்

கொரோனா காரணமாக வெளிநாட்டு படப்பிடிப்புகளை தமிழ் திரையுலகினர் உட்பட இந்திய திரையுலகினர்கள் அனைவருமே தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் கோரம்!!! கண் கலங்க வைக்கும் வீடியோ…

கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை உலகம் முழுக்க ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இதயத்தை கசக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இயக்குனராக அறிமுகமாகும் விஜய், விக்ரம் பட நாயகி!

விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு', விக்ரம் நடித்த 'காசி' உள்பட ஏராளமான தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் தற்போது இயக்குனராகி உள்ளார்