2-வது இன்னிங்க்ஸ்-க்கு தயாராகும் வைகைப்புயல்....! அதுவும் பிரபல இயக்குனருடன் கூட்டணி.....!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை நடிகராகவும், மிகச்சிறந்த குணசித்திர கலைஞராகவும் வலம் வருபவர் தான் நடிகர் வடிவேலு. கடந்த சில வருடங்களாக இவர் திரையில் தோன்றவில்லை என்றாலும், இணையம் முழுவதும் இவரது பேச்சு தான்.

வடிவேலுவின் புகைப்படம் இல்லாமலோ, ஒரு டயலாக் இல்லாமலோ ஒரு மனிதன் இணைய உலகை கடக்க முடியாது. அந்த அளவிற்கு இக்கால சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் இன்னும் பிரபலமாக உள்ளார். இவர் இறுதியாக நடித்திருந்தது இம்சை அரசன் 24 ஆம் புலிக்கேசி படத்தில் தான். இரண்டாம் பாகம் எடுப்பதற்குள் அவர் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதன்பிறகு எந்த படங்களிலும் இவர் ஒப்பந்தமாகவில்லை. தயாரிப்பாளர் ஷங்கர் வைக்கும் கோரிக்கை என்னவெனில், ஒன்று படத்தை முடித்து தாருங்கள், இல்லையெனில் நஷ்டமான 6 கோடியை திருப்பி தாருங்கள் என்பது தான். ஆனால் இதில் எதையும் செய்ய வடிவேலு தயாராக இல்லை.

ரசிகர்கள் அவர் பெரிய திரையில் ரீ-என்ட்ரீ கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வடிவேலு ஓடிடி தளத்தில் நடிக்க இருக்கிறார் செய்திகள் வெளியானது.

வடிவேலு, இயக்குனர் சுராஜ் காம்போ என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தலைநகரம் படத்தில், நாய்கேசர் கதாபாத்திரம், மருதமலை படத்தில் போலீஸ் கதாபாத்திரம், இவை இரண்டும் வடிவேலுவின் காமெடி ஹிட்டுக்கு திருப்பு முனையாக அமைந்திருந்தது. வடிவேலு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த நிலையில், மீண்டும் அவரை கத்திச்சண்டை படம் மூலம் நகைச்சுவை நாயகனாக களம் இறக்கிய பெருமை சுராஜையே சாரும்.

இந்நிலையில் வடிவேலுவின் 'நாய்சேகர்' என்ற பிரபல நகைச்சுவை கதாபாத்திரத்தின் பெயரில் திரைப்படம் ஒன்றை எடுக்கவுள்ளார் சுராஜ். இப்படம் வடிவேலுவின் 2-ஆம் இன்னிங்ஸ்-ஆக இருக்கும் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வரும் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகிறது.

தலைநகரம்-2 படத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கவிருப்பதாகவும், இயக்குனர் சுராஜ் படம் குறித்த முக்கிய தகவல்களும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே நம் செய்தி தளத்தில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அவதூறாக பேசிய வழக்கில் கைது.....! மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாய்கிறது....!

பட்டியிலினத்தவரை அவதூறாக பேசிய வழக்கில், கைதான நடிகை மீரா மிதுன் மீது குண்டார்ஸ் சட்டம் பாய்ந்துள்ளதால்

பதவியேற்றவுடன் நடிகர் வாகை சந்திரசேகரின் முதல் அதிரடி அறிவிப்பு!

நடிகர் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு சமீபத்தில் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவி அளிக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து மரியாதை நிமித்தமாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை

குரைக்கிற நாய் குரைச்சிகிட்டே தான் இருக்கும்: பென்னி தயால் முடிவுக்கு சூப்பர் சிங்கர் போட்டியாளர் கமெண்ட்!

குரைக்கும் நாய்களை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்கள் குரைத்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்றும் அது மட்டும் தான் அவர்கள் செய்யக் கூடிய வேலை என்றும் பென்னி தயால் முடிவுக்கு

காயத்தில் அடிக்கப்பட்ட ஸ்டேப்ளர்கள்: யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

யாஷிகாவின் காயத்தில் ஸ்டேப்ளர் அடிக்கப்பட்டு உள்ள வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்து அதற்கு விளக்கம் கொடுத்த தமிழ் நடிகர்!

மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்து, அதற்கு விளக்கம் கொடுத்த தமிழ் நடிகர் ஒருவரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.