'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் 'அப்பத்தா' பாடல்: பட்டையை கிளப்பும் வடிவேலு!

வைகைப்புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘அப்பத்தா’ என்ற பாடல் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலை பிக்பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளர் அசல் கோலார் மற்றும் துரை எழுதி உள்ளனர். இந்த பாடல் முதல்முறை கேட்கும்போதே சூப்பராக உள்ளது என்றும் குறிப்பாக இந்த பாடலில் வடிவேலு பட்டையை கிளப்பியுள்ளார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.

More News

உங்களை மகிழ்விக்க இல்லங்கள் தேடி வருகிறது 'பிரின்ஸ்': டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அறிவிப்பு

தீபாவளி கொண்டாட்டமாக  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில்,  நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியாபோஷப்கா ஆகியோர் நடிப்பில்,  வெளியான 'ப்ரின்ஸ்' திரைப்படம் இந்தியாவின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங்

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

பழம்பெரும் தெலுங்கு நடிகரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 80.

'சர்தார்' படத்தை அடுத்து 'பிரின்ஸ்' ஓடிடி ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

 சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' மற்றும் கார்த்தி நடித்த 'சர்தார்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் தீபாவளி விருந்தாக கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியானது என்பது தெரிந்ததே. 

வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே.

லிவ்-இன் உறவில் இருந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்!

தன்னுடன் லிவ்-இன் உறவில் இருந்த காதலி, திருமணம் செய்ய வலியுறுத்தியதை அடுத்து அவரை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.