மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்கிறேன்: முதலமைச்சரை சந்தித்தபின் வடிவேலு பேட்டி!

  • IndiaGlitz, [Wednesday,July 14 2021]

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த வடிவேலு கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்து அதிமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து வடிவேலுவை திரையுலகினர் ஒதுக்க தொடங்கினர். இதனால் அவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் திரையுலகில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்

இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ளதை அடுத்து மீண்டும் நிறைய படங்களில் நடிக்க தொடங்கி உள்ளேன் என வடிவேலு கூறியுள்ளார். சற்றுமுன் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கிய வடிவேலு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் ’முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஐந்து லட்சம் வழங்கினேன். ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்திய முதல்வர் என்று புகழாரம் சூட்டினார். மேலும் உலகமே உற்று நோக்கும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய வடிவேலு மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்

More News

உலகிலேயே ரொம்ப காஸ்ட்லியான பர்கர்… ஒரு பீஸ் வெறும் ரூ.4 லட்சம்?

கொரோனா நேரத்தில் உணவக உரிமையாளர்கள் பலரும் கடையை இழுத்துப் பூட்டி விட்டு வீட்டில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

கொரோனாவிற்குப் பிறகு 4 வாரத்தில் 4,000 கோடி வசூலித்த மாஸ் திரைப்படம்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு Fast&Furious சீரிஸ் வரிசையில் வெளியான F9- The fast saga எனும் ஹாலிவுட் திரைப்படம் வெறும் 4 வாரத்தில் 4,000 ஆயிரம் கோடிகளை வசூலித்து இருக்கிறது.

5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆணுறை வழங்கும் பள்ளிகள்! என்னதான் நடக்குது?

அமெரிக்காவின் சிகாகோ மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் 5 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளே ஆணுறைகளை வழங்கி வருகின்றன.

வருஷத்தில் 300 நாட்களை தூக்கத்திலேயே கழிக்கும் விசித்திர மனிதன்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கும்பர்கர்ணனுக்கு ஈடாக ஒரு வருஷத்தில் 300 நாட்களை தூக்கத்திலேயே கழித்து வருகிறார்.

8 ஆண்டுகளுக்கு முன்பே காருக்கு வரி கட்டிவிட்டாரா விஜய்? வைரலாகும் ரசீது!  

தளபதி விஜய் வரி பிரச்சனை குறித்து இன்று நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பும், அவருக்கு நீதிமன்றம் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே