சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்ட வடிவேலு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Wednesday,August 21 2024]

நடிகர் சிங்கமுத்துவிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு விசாரணையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்தவர் சிங்கமுத்து என்பதும் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்ததால் சில ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த மனுவில் ‘கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நானும் சிங்கமுத்துவும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் நல்ல வெற்றி பெற்றன.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு என்னைப் பற்றி சிங்கமுத்து மோசமாக பேச தொடங்கினார். அதனால் அவர் இல்லாமல் நடிக்க தொடங்கினேன். இந்த நிலையில் சிங்கமுத்து எனக்கு ஒரு பிரச்சனைக்குரிய நிலத்தை வாங்கி கொடுத்தார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் சிங்கமுத்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து என்னை பற்றி தரக்குறைவாக பேசி வருகிறார். இது எனக்கு மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும், என்னைப் பற்றி அவதூறாக பேசுவதற்கு சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இரண்டு வாரத்திற்குள் சிங்கமுத்து இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

More News

விஜய் டிவி  சீரியல் நாயகிக்கு கிடைத்த சினிமா வாய்ப்பு.. ஹீரோ யார் தெரியுமா?

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ஹீரோ யார் என்பது உள்பட சில தகவல்கள் வெளியாகி உள்ளன. 

'மகாராஜா' படத்தை மிஸ் செய்தாரா சாந்தனு? அவரே சொன்ன தகவல்..!

இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று கே.பாக்யராஜ் போற்றப்படும் நிலையில் அவரது மகன் சாந்தனு ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றி படத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்.

பழம்பெரும் நடிகர் சோ மனைவி காலமானார். அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சோ ராமசாமி கடந்த 2016 ஆம் ஆண்டு காலமான நிலையில் அவரது மனைவி இன்று காலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோனி, சச்சினை அடுத்து இன்னொரு கிரிக்கெட் வீரரின் பயோகிராபி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

'வேட்டையன்' 'விடாமுயற்சி' அப்டேட்.. ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'வேட்டையன்' மற்றும் அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்து வரும் லைக்கா நிறுவனம்