close
Choose your channels

அரசு,தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம்...! மத்திய அரசு...!

Wednesday, April 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் போதும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

வரும் ஏப்ரல்-11-ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்த நிலையில், தினசரி பாதிப்பு என்பது 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. பொதுவாகவே 45-வயதிற்கும் மேலுள்ள மக்களுக்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது வரை கொரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 25,14,39,598- பேர் என ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வயது வரம்பில் மாற்றம் இல்லை எனவும், பணியை செய்ய 100 பணியாளர்கள் இருந்தால் போதும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment