அரசு,தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம்...! மத்திய அரசு...!

  • IndiaGlitz, [Wednesday,April 07 2021]

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் போதும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

வரும் ஏப்ரல்-11-ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்த நிலையில், தினசரி பாதிப்பு என்பது 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. பொதுவாகவே 45-வயதிற்கும் மேலுள்ள மக்களுக்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது வரை கொரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 25,14,39,598- பேர் என ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வயது வரம்பில் மாற்றம் இல்லை எனவும், பணியை செய்ய 100 பணியாளர்கள் இருந்தால் போதும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

ஸ்டாலினை முந்திய பழனிச்சாமி...! வாக்குப்பதிவுகள் எத்தனை வீதம் தெரியுமா...?

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், வாக்களித்தவர்களின் வாக்குப்பதிவுகள் வீதம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யாபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

'தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக்கதவை' இசைஞானியின் குரலில் 'மாமனிதன்' பாடல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'மாமனிதன்' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் நிலையில்

போஸ்டர் அடிச்சதெல்லாம் வேஸ்ட்டா? அரியர் தேர்வுகளை நடத்த ஐகோர்ட் உத்தரவு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது என்பது தெரிந்ததே.

மீண்டும் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 3986 பேர்களுக்கு புதிதாக கொரோனா

கருப்பு சிவப்பு சைக்கிளில் ஏன் வந்தார் விஜய்? இதுதான் காரணம்!

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்களிக்க வந்த தளபதி விஜய் சைக்கிளில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே