தடுப்பூசி போட்டா, மாஸ்க்  தேவையில்லை..! எந்த நாட்டில் தெரியுமா..?

 

கொரோனா தடுப்பூசியை இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டவர்கள், மாஸ்க் போடத்தேவையில்லை என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

கொரோனா 2 டோஸ்களை செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில், மாஸ்க் போட தேவையில்லை என அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தி வரும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்காவின் மக்கள் தொகையில் 46% பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டதால், வைரஸ் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. இதுவரை 15 கோடியே 40 லட்சம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார்கள். அதேபோல் 11 கோடியே 70 லட்சம் பேர் இரண்டாவது தவணை கோவிட் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்கள்.

இந்த நிலையில் தான் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், பொதுஇடங்களில் முகக்கவசம் அணியத்தேவையில்லை என்றும், 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

இருப்பினும் 2 டோஸ் செலுத்திக்கொண்டவர்கள், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான போக்குவரத்து, விமான நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் வீடுகள் அல்லாமல் தங்கும் பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் நோய்க்கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் நடைமுறையில் இருக்கும் உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசியை செலுத்தாதவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

More News

ஒரு நுரையீரலைக் கொண்ட இளம்பெண்… கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வெற்றிக்கதை!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் ஆக்சிஜன் பற்றாக்குறை, உயிரிழப்பு எனத் தொடர்ந்து எதிர்மறையான செய்திகளையே பார்த்து வருகிறோம்.

கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு விலகினார் என்பதையும், அதனை அடுத்து கட்சியின் சார்பில் மதுரவாயில்

யுவன்ஷங்கர் ராஜா மற்றும் ஏ.ஆர்.அமீன் பாடிய தனித்துவ பாடல் வைரல்!

இன்று ரம்ஜான் பண்டிகையை அடுத்து அடுத்து தமிழ் திரையுலக இளம் இசைமேதைகளில் ஒருவரான யுவன் சங்கர் ராஜாவும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களின் மகன் ஏ.ஆர்.அமீன் அவர்களும் இணைந்து

ஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்…

மத்திய அரசு, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின்

ஓடிடியில் ரிலீஸாகும் 3 நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட படம்!

திரையரங்குகளில் ரிலீசாகி மூன்றே நாட்களில் தூக்கப்பட்ட திரைப்படம் தற்போது ஓடிடியில் விரைவில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது